ETV Bharat / state

’கலாம் நினைவிடத்தில் அறிவியல் மையம் விரைவில் அமைக்க வேண்டும்’ - குடும்பத்தினர் கோரிக்கை - அப்துல் கலாமின் 88 ஆவது பிறந்தநாள்

ராமநாதபுரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் குடும்பத்தினர், பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில் அறிவியல் மையம் அமைக்கும் பணியை தாமதிக்காமல் விரைவில் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

abdul_kalam_88th_birthday
author img

By

Published : Oct 15, 2019, 8:09 PM IST

Updated : Oct 15, 2019, 8:21 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 88ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல்கலாமின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

apj-abdulkalam-family-request-the-government-to-make-science-centre
அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர்

மேலும், இது குறித்து ஏபிஜே அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் கூறுகையில், ”அப்துல்கலாம் பெயரில் அறிவியல் மையம் அமைத்து தருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கான நடவடிக்கை தற்போதுவரை எடுக்கப்படவில்லை. மாநில அரசு ஆறு அறிவியல் மையம் அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்காமல்தான் உள்ளன.

apj-abdulkalam-family-request-the-government-to-make-science-centre
அப்துல் கலாமின் நினைவிடம்

ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள நினைவு மண்டபத்தை 65 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். அறிவியல் மையம் அமையும்பட்சத்தில் இங்குவரும் இளைஞர்கள் எளிதில் அறிவியல் மையத்தை காணமுடியும். அனைத்து மாணவர்களாலும் இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவிற்குச் சென்று அதை காண இயலாது என்பதால் மத்திய, மாநில அரசுகள் தாமதிக்காமல் பேக்கரும்பில் அறிவியல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

ஈடிவி பாரதிட்டம் பேசியஏபிஜே அப்துல் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர்

அதேபோல், லீட் இந்தியா பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஹரிஹெப்பனபல்லி நேரில் வந்து அப்துல் கலாமின் நினைவிடத்தில் குடும்பத்துடன் சேர்ந்து அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் அண்ணன் முத்து மீரா மரைக்காயரிடம் சாந்தி ஸ்ரீ குளோபல் சார்பாக அமைதிக்கான விருதை வழங்கினார்.

இதையும் படிங்க:

தேசிய பேரிடர் தினம் - தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு!

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் 88ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல்கலாமின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

apj-abdulkalam-family-request-the-government-to-make-science-centre
அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர்

மேலும், இது குறித்து ஏபிஜே அப்துல்கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் கூறுகையில், ”அப்துல்கலாம் பெயரில் அறிவியல் மையம் அமைத்து தருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கான நடவடிக்கை தற்போதுவரை எடுக்கப்படவில்லை. மாநில அரசு ஆறு அறிவியல் மையம் அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் அதற்கான பணிகள் தொடங்காமல்தான் உள்ளன.

apj-abdulkalam-family-request-the-government-to-make-science-centre
அப்துல் கலாமின் நினைவிடம்

ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள நினைவு மண்டபத்தை 65 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். அறிவியல் மையம் அமையும்பட்சத்தில் இங்குவரும் இளைஞர்கள் எளிதில் அறிவியல் மையத்தை காணமுடியும். அனைத்து மாணவர்களாலும் இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவிற்குச் சென்று அதை காண இயலாது என்பதால் மத்திய, மாநில அரசுகள் தாமதிக்காமல் பேக்கரும்பில் அறிவியல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

ஈடிவி பாரதிட்டம் பேசியஏபிஜே அப்துல் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர்

அதேபோல், லீட் இந்தியா பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஹரிஹெப்பனபல்லி நேரில் வந்து அப்துல் கலாமின் நினைவிடத்தில் குடும்பத்துடன் சேர்ந்து அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் அண்ணன் முத்து மீரா மரைக்காயரிடம் சாந்தி ஸ்ரீ குளோபல் சார்பாக அமைதிக்கான விருதை வழங்கினார்.

இதையும் படிங்க:

தேசிய பேரிடர் தினம் - தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு!

Intro: இராமநாதபுரம்
அக்.15

அப்துல் கலாமின் 88வது பிறந்தநாள், குடும்பத்தினர் அறிவியல் மையம் அமைக்கும் பணியை தாமதம் முடிக்க மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை.


Body: முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 88 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் இளைஞர்களாளுன் பள்ளி, கல்லூரி மாணவர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேக்கரும்பு அமைந்துள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின் ஈடிவி பாரதிட்டம் பேசிய ஏபிஜே அப்துல் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர் கூறியது பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்திற்கு வரும் பொழுதெல்லாம் அவரின் நினைவுகள் மிகப்பெரிய அளவில் எங்களுக்கு எப்பொழுதும் இருக்கும்.
அப்துல் கலாம் பெயரில் அறிவியல் மையம் அமைத்து தருவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது அதற்கான நடவடிக்கை தற்போது வரை எடுக்கப்படவில்லை. மாநில அரசு 6 அறிவியல் மையம் அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் தற்போது வரை அதற்க்கான பணிகள் துவங்காமல் உள்ளது. இராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள நினைவு மண்டபத்தை தற்போது வரை 65 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அறிவியல் மையம் அமையும்பட்சத்தில் இங்கு வரும் இளைஞர்கள் மாணவர்கள் எளிதில் அதை காண முடியும். அனைத்து மாணவர்களாலும் இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவிற்க்குச் சென்று அதை காண இயலாது. அதனால் மத்திய மாநில அரசுகள் தாமதிக்காமல் அறிவியல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல் லீட் இந்தியா பவுண்டேஷன் தொண்டு நிறுவனம் சார்பாக அதன் தலைவர் ஹரிஹெப்பனபல்லி நேரில் வந்து அப்துல் கலாமின் நினைவிடத்தில் குடும்பத்துடன் சேர்ந்து அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் அண்ணன் முத்து மீரா மரைக்காயரிடம் சாந்தி ஸ்ரீ குளோபல் சார்பாக அமைதிக்கான விருதை வழங்கினர்

பின் ஈடிவியிடம் அவர் பகிர்ந்து கொண்டது

" லீட் இந்தியா பவுண்டேசன் தொண்டு நிறுவனம் சாந்தி ஸ்ரீ குளோபல் சார்பில் அமைதிக்கான விருதை
அப்துல்கலாமிற்கு கடந்த 2015 அக்டோபர் 15-ல் அமெரிக்காவில் வழங்க இருந்தோம். ஆனால், அவர் அதற்கு முன்பாகவே ஜூலை 27தேதி அப்துல் கலாம் அவர்கள் மறைந்துவிட்டார். இதன் காரணமாக அப்பொழுது எங்களால் அந்த விருதை அவருக்கு அளிக்க இயலவில்லை. தற்போது அவரின் உதவியாளரும் ஆன சதீஷ்ரெட்டியிடம் அந்த விருதை வழங்கியுள்ளோம், தற்பொழுது பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு வந்து அவரது மூத்த சகோதரர் முத்து மீரா மரைக்காயரிடம் அந்த விருதுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை இந்த நினைவு மண்டபத்தில் வைக்கும் வகையில் வழங்கி இருக்கிறோம் .அவர் எதிர்பார்த்தது போலவே இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக அனைத்து துறையிலும் விளங்க வேண்டுமென்றும் என்று" தெரிவித்தார்.


Conclusion:
Last Updated : Oct 15, 2019, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.