ETV Bharat / state

சாலையைக் கடக்க முயன்ற சிறுவனின் தலையை துண்டித்த லாரி!

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே சாலையை கடக்கும் முயன்ற எட்டு வயது சிறுவன் டிப்பர் லாரி மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தான்.

author img

By

Published : Sep 23, 2019, 9:45 PM IST

Updated : Sep 24, 2019, 7:52 AM IST

8 year old boy dead by road accident

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் அருகே உள்ள வெள்ளப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி கிருஷ்ணவேணி, சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் அஸ்வத்(8), சாயல்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான்.

அஸ்வத் காலை 7.35 மணியளவில் வீட்டின் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்ட கிழக்கு கடற்கரைச் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தூத்துக்குடியிலிருந்து சாயல்குடி நோக்கி வந்த டிப்பர் லாரி சிறுவன் அஸ்வத் மீது எதிர்பாராவிதமாக மோதியதில், சிறுவன் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

small boy ashwath
சிறுவன் அஸ்வத்

இதனையடுத்து ஆத்திரமடைந்த வெள்ளப்பட்டி கிராம மக்கள் மாணவரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி, கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் குப்பைத் தொட்டியை சாலையை கடக்காதவாறு வீடுகளின் அருகிலேயே வைக்கவும், வேகத்தடை அமைக்கவும் ஏற்கனவே கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

இறந்த சிறுவனின் உடலை சாலையிலிருந்து காவல் துறையினர் எடுக்கவிடாமல் மாலை நான்கு மணி வரை கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கடலாடி வட்டாட்சியர் முத்துக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் மாலை 4 மணிக்கு மறியல் வாபஸ் பெறப்பட்டது. சாயல்குடி காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் அருகே உள்ள வெள்ளப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி கிருஷ்ணவேணி, சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் அஸ்வத்(8), சாயல்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தான்.

அஸ்வத் காலை 7.35 மணியளவில் வீட்டின் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்ட கிழக்கு கடற்கரைச் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தூத்துக்குடியிலிருந்து சாயல்குடி நோக்கி வந்த டிப்பர் லாரி சிறுவன் அஸ்வத் மீது எதிர்பாராவிதமாக மோதியதில், சிறுவன் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

small boy ashwath
சிறுவன் அஸ்வத்

இதனையடுத்து ஆத்திரமடைந்த வெள்ளப்பட்டி கிராம மக்கள் மாணவரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி, கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் குப்பைத் தொட்டியை சாலையை கடக்காதவாறு வீடுகளின் அருகிலேயே வைக்கவும், வேகத்தடை அமைக்கவும் ஏற்கனவே கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

இறந்த சிறுவனின் உடலை சாலையிலிருந்து காவல் துறையினர் எடுக்கவிடாமல் மாலை நான்கு மணி வரை கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கடலாடி வட்டாட்சியர் முத்துக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் மாலை 4 மணிக்கு மறியல் வாபஸ் பெறப்பட்டது. சாயல்குடி காவல் துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:இராமநாதபுரம்
செப்.23

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சாலையை கடக்கும் முயன்ற 8 வயது சிறுவன் டிப்பர் லாரி மோதியதில் தலைதுண்டித்து பலி, 8 மணி நேரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கிராம மக்கள் சாலை மறியல். Body:இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் அருகே உள்ள வெள்ளப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி கிருஷ்ணவேணி, சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் அஸ்வத்(8), சாயல்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். அஸ்வத் காலை 7.35 மணியளவில் வீட்டின் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்ட கிழக்கு கடற்கரைச் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது தூத்துக்குடியிலிருந்து சாயல்குடி நோக்கி வந்த டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது . லாரியை கடலாடி அருகே உள்ள அ.படுபனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வில்வலிங்கம் மகன் முருகலிங்கம் (21) ஓட்டினார். லாரி சிறுவன் அஸ்வத் மீது மோதியதில், தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதனையடுத்து வெள்ளப்பட்டி கிராம மக்கள் குப்பைத் தொட்டியை சாலையை கடக்காதவாறு வீடுகள் பக்கம் வைக்கவும், வேகத்தடை அமைக்கவும் ஏற்கனவே கோரிக்கை விடுத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி, கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காலை நேரத்தில் மறியல் நடந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இறந்த மாணவரின் உடலை சாலையிலிருந்து போலீஸார் எடுக்கவிடாமல் மாலை 4 மணி வரை கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதனால் சாயல்குடி-சூரங்குடி இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சாயல்குடி- செவல்பட்டி சாலையில் மாற்றிவிடப்பட்டது.

கடலாடி வட்டாட்சியர் முத்துக்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மாலை 4 மணிக்கு மறியல் வாபஸ் பெறப்பட்டது. சாயல்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:
Last Updated : Sep 24, 2019, 7:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.