ETV Bharat / state

'70 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்'- ஆட்சியர் அறிவிப்பு!

author img

By

Published : May 5, 2021, 9:25 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

'70 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்'- ஆட்சியர் அறிவிப்பு!
'70 ஆயிரம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்'- ஆட்சியர் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ”ராமநாதபுரம் முழுவதும் 1900 ஆக்சிஜன் படுக்கைகள் எற்படுத்தப்பட்டுவருகிறது. ஒரு வாரத்தில் தயார் நிலையில் இருக்கும்.

11 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் தேவைப்படும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தூத்துக்குடியிலுள்ள இரண்டு ஆக்சிஜன் நிறுவனங்களிடம் பேசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், தற்போது வரை மாவட்டத்தில் 70ஆயிரத்து 600 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மக்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளி, கை தூய்மையை கடைபிடித்தால் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்தலாம், அதற்கு மக்கள் அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு அளித்தால்தான் பேரிடரை கடக்க முடியும் என்பதே உண்மை என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ”ராமநாதபுரம் முழுவதும் 1900 ஆக்சிஜன் படுக்கைகள் எற்படுத்தப்பட்டுவருகிறது. ஒரு வாரத்தில் தயார் நிலையில் இருக்கும்.

11 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் தேவைப்படும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தூத்துக்குடியிலுள்ள இரண்டு ஆக்சிஜன் நிறுவனங்களிடம் பேசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், தற்போது வரை மாவட்டத்தில் 70ஆயிரத்து 600 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மக்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளி, கை தூய்மையை கடைபிடித்தால் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்தலாம், அதற்கு மக்கள் அரசுடன் இணைந்து ஒத்துழைப்பு அளித்தால்தான் பேரிடரை கடக்க முடியும் என்பதே உண்மை என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.