ETV Bharat / state

மீன்களுக்கு உணவாகும் 350 விநாயகர் சிலைகள் - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீன்களுக்கு உணவாகும் வகையில்  விநாயகர் சிலை தயாரிப்பு

ராமநாதபுரம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீன்களுக்கு உணவாகும் வகையில் காகிதக் கூழ், மூலிகை எண்ணெயில் தயாரித்த வர்ணங்களை வைத்து விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுவருகிறது.

விநாயகர் சிலை
author img

By

Published : Aug 27, 2019, 9:02 PM IST

Updated : Aug 27, 2019, 10:12 PM IST

நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பரமக்குடி பகுதிகளில் 350 பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. கடல் சார்ந்த இடமும், மீன்கள் அதிகளவில் கிடைக்கும் பகுதி என்பதாலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மரவள்ளிக் கிழங்கு மாவு, காகிதக் கூழ், தானிய மாவு, மரத்தூள் என தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய, மீன்களுக்கு உணவாகும் பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுவருகின்றன. மூலிகை எண்ணெயில் வர்ணம் தயாரித்து சிலைகளை அழகுபடுத்தி வருகின்றனர்.

காகிதக்கூழ் முலம் உருவான விநாயகர் சிலை
காகிதக்கூழ் முலம் உருவான விநாயகர் சிலை

இது குறித்து இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், 'ராமநாதபுரத்தில் மொத்தமாக 350 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. இதில் 150 சிலைகள் ராமேஸ்வரத்திலும், மற்ற சிலைகள் பரமக்குடியிலும் தயாரிக்கப்பட்டுவருகின்றன. சிலை தயாரிப்பின் மூலப்பொருளாக காகித கூழ் இடம்பெற்றுள்ளது.

விநாயகர் சிலை தயாரிக்கு இடம்
விநாயகர் சிலை தயாரிக்கு இடம்

விநாயகர் சிலைகள் செப்டம்பர் 2 ஆம் தேதி பூஜை செய்யப்பட்டு, பின்னர் 3ஆம் தேதி ராமேஸ்வரம் பகுதியிலும் 4ஆம் தேதி தேவிப்பட்டினம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடலில் கரைக்கப்படவுள்ளன. இந்த சிலைகள் 3 அடியில் இருந்து 9 அடி வரையில் உள்ளன. மேலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தேவையான பந்தல், பூஜை பொருட்கள், மின்சாரம் அனைத்தும் அரசு இலவசமாக வழங்க வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைத்தார்.

மீன்களுக்கு உணவாகும் 350 விநாயகர் சிலை

நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பரமக்குடி பகுதிகளில் 350 பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுவருகிறது. கடல் சார்ந்த இடமும், மீன்கள் அதிகளவில் கிடைக்கும் பகுதி என்பதாலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மரவள்ளிக் கிழங்கு மாவு, காகிதக் கூழ், தானிய மாவு, மரத்தூள் என தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய, மீன்களுக்கு உணவாகும் பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டுவருகின்றன. மூலிகை எண்ணெயில் வர்ணம் தயாரித்து சிலைகளை அழகுபடுத்தி வருகின்றனர்.

காகிதக்கூழ் முலம் உருவான விநாயகர் சிலை
காகிதக்கூழ் முலம் உருவான விநாயகர் சிலை

இது குறித்து இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், 'ராமநாதபுரத்தில் மொத்தமாக 350 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன. இதில் 150 சிலைகள் ராமேஸ்வரத்திலும், மற்ற சிலைகள் பரமக்குடியிலும் தயாரிக்கப்பட்டுவருகின்றன. சிலை தயாரிப்பின் மூலப்பொருளாக காகித கூழ் இடம்பெற்றுள்ளது.

விநாயகர் சிலை தயாரிக்கு இடம்
விநாயகர் சிலை தயாரிக்கு இடம்

விநாயகர் சிலைகள் செப்டம்பர் 2 ஆம் தேதி பூஜை செய்யப்பட்டு, பின்னர் 3ஆம் தேதி ராமேஸ்வரம் பகுதியிலும் 4ஆம் தேதி தேவிப்பட்டினம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடலில் கரைக்கப்படவுள்ளன. இந்த சிலைகள் 3 அடியில் இருந்து 9 அடி வரையில் உள்ளன. மேலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தேவையான பந்தல், பூஜை பொருட்கள், மின்சாரம் அனைத்தும் அரசு இலவசமாக வழங்க வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைத்தார்.

மீன்களுக்கு உணவாகும் 350 விநாயகர் சிலை
Intro:இராமநாதபுரம்

மீன்களுக்கு உணவா கும் வகையில் ராமநாதபுரத்தில் தயாராகி வரும் 350 விநாயகர் சிலைகள்.


Body:தமிழகத்தில் இரண்டாவது மிக நீளமான கடற்கரையைக் கொண்ட இராமநாதபுரம் மாவட்டம் 271 கிலோ மீட்டர் நீள கடல் பரப்பளவைக் கொண்டது. இராமநாதபுரம் கடற்கரை பகுதியிலிருந்து ஆண்டிற்கு சுமார் 1கோடியே 48 லட்சம் டன் மீன்கள் பிடிக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பரமக்குடி பகுதிகளில் 350 பிள்ளையார் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடல் சார்ந்த மாவட்டம் என்பதாலும் மீன்கள் அதிகளவில் கிடைக்கும் பகுதி என்பதாலும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாகவும் மீன்களுக்கு உணவாக மாறும் வகையில் காகிதக்கூழ் தானிய மாவு கொண்டு பிள்ளையார் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஈ டிவி பாரத் தெரிவித்தது ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 350 விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 150 சிலைகள் ராமேஸ்வரத்தில் மற்ற சிலைகள் பரமக்குடியில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 2 ஆம் தேதி விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்படுகின்றன பின்னர் மூன்றாம் தேதி ராமேஸ்வரம் பகுதியிலும் நான்காம் தேதி தேவிப்பட்டினம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கடலில் கரைக்க இருப்பதாக தெரிவித்தார்.
இந்த சிலைகள் 3 அடியில் இருந்து 9 அடி வரையில் உள்ளன. விலை 4 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரம் வரை இருப்பதாக அவர் தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு பந்தல், பூஜை பொருட்கள், மின்சாரம் அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று அவர் அப்போது கோரிக்கை வைத்தார்.

பேட்டி
ராமமூர்த்தி.
இந்து முன்னணி
மாவட்ட செயலாளர்


Conclusion:
Last Updated : Aug 27, 2019, 10:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.