ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 500 மேற்பட்ட படகுகளில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை விரட்டி அடித்தனர். மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்களையும் 3 விசைப்படுகளையும் சிறைபிடித்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன் தினம் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.