இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சிக்குள்பட்ட ஆய்குடி அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட முட்டைகள் கெட்டுப்போய் இருந்தது தெரிய வந்துள்ளது.
கரோனா ஊரடங்கால் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், குழந்தைகளுக்கு உலர் பொருள்களாக அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
ஆய்க்குடி அங்கன்வாடி மையத்தில் 5 வயதுக்குள்பட்ட 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த மையத்தில் ஒரு குழந்தைக்கு 10 முட்டை வீதம் 20 குழந்தைகளுக்கு 200 முட்டைகள் அங்கன்வாடி மைய பொறுப்பாளரால் வழங்கப்பட்டது.
![120 eggs are rotten at the Anganwadi Center!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-rmd-01-rotten-eggs-120-found-in-angawadi-ramnad-pic-script-tn10040_07072021135534_0707f_1625646334_562.jpg)
இதையும் படிங்க : முட்டை விலை 20 காசுகள் சரிவு