ETV Bharat / state

குப்பை கிடங்கில் 10 பசுக்கள் உயிரிழப்பு; விஷம் வைத்து கொலையா..? - மண்டபம் ஊராட்சி

ராமநாதபுரம்: குப்பைக் கிடங்கில் 10 பசுமாடுகள் இறந்து கிடந்த சம்பவம் மண்டபம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cow
author img

By

Published : May 29, 2019, 12:00 AM IST

மண்டபம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் மண்டபம் முகாம், முனைக்காடு, வண்ணாந்தரவை ஆகிய பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பை குவியலில் இரை தேடி பசுமாடுகள் சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை இரை தேடிச் சென்ற பசு மாடுக்கள் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பசுக்களின் உரிமையாளர்கள் தேடிச் சென்றபோது, குப்பை கிடங்குகளில் 10 பசுமாடுகள் இறந்து கிடந்தன. இதை பார்த்த உரிமையாளர்கள் கதறி அழுதனர்.

இந்த மாடுகள், முனைக்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ், நாகலட்சுமி, முத்துச்சாமி, சண்முகவேல், பெரியகருப்பன், ராணி, பாகம்பிரியாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் என்று தெரியவந்தது. பசு ஒன்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்றும், குழந்தைபோல வளர்த்த மாடுகள் இறந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பசு மாடுகள் இறந்த பகுதியில் பூச்சிக் கொல்லி மருந்தான குருணை மருந்து கிடந்துள்ளது. அதனை தவறுதலாக மாடுகள் சாப்பிட்டு இறந்துள்ளது என்று தெரியவந்தது.

பசுக்களை கொல்வதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் குருணை மருந்தை கொட்டி வைத்திருக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த கால்நடைத் துறையினர் உடற்கூராய்வுக்காக பசுமாடுகளை எடுத்துச் சென்றனர். பத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண்டபம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் மண்டபம் முகாம், முனைக்காடு, வண்ணாந்தரவை ஆகிய பகுதிகளில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பை குவியலில் இரை தேடி பசுமாடுகள் சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை இரை தேடிச் சென்ற பசு மாடுக்கள் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பசுக்களின் உரிமையாளர்கள் தேடிச் சென்றபோது, குப்பை கிடங்குகளில் 10 பசுமாடுகள் இறந்து கிடந்தன. இதை பார்த்த உரிமையாளர்கள் கதறி அழுதனர்.

இந்த மாடுகள், முனைக்காடு பகுதியை சேர்ந்த பால்ராஜ், நாகலட்சுமி, முத்துச்சாமி, சண்முகவேல், பெரியகருப்பன், ராணி, பாகம்பிரியாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் என்று தெரியவந்தது. பசு ஒன்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்றும், குழந்தைபோல வளர்த்த மாடுகள் இறந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பசு மாடுகள் இறந்த பகுதியில் பூச்சிக் கொல்லி மருந்தான குருணை மருந்து கிடந்துள்ளது. அதனை தவறுதலாக மாடுகள் சாப்பிட்டு இறந்துள்ளது என்று தெரியவந்தது.

பசுக்களை கொல்வதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் குருணை மருந்தை கொட்டி வைத்திருக்கக்கூடும் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த கால்நடைத் துறையினர் உடற்கூராய்வுக்காக பசுமாடுகளை எடுத்துச் சென்றனர். பத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராமேஸ்வரம்
மே.28
10 பசு மாடுகள் மர்மமான முறையில் மரணம், விஷம் வைத்து கொலை செய்து இருப்பதாக உரிமையாளர்கள் குற்றச்சாட்டு.


 இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் முனைக்காடு வண்ணாந்தரவையில்  மண்டபம் பேரூராட்சி  நிர்வாகம் சார்பில் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. 
இதில் முனைக்காடு பகுதி வீடுகளில் வளர்க்கப்படும் கறவை பசுக்கள் இரை தேடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை இரை தேடிச் சென்ற கறவை பசுக்கள் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பசுக்களின் உரிமையாளர்கள் தேடிச் சென்ற போது பசுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வழி நெடுக மர்மமான முறையில் இறந்து கிடந்தன. முனைக்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், நாகலட்சுமி, முத்துச்சாமி, சண்முகவேல், பெரியகருப்பன், ராணி, பாகம்பிரியாள் ஆகியோரது 10 பசுக்கள் இறந்ததாக தெரிய வந்தது. பசு ஒன்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என தெரிவித்தனர்.  பசு மாடுகள் இறந்த பகுதிகளில் குருனை மருந்து கிடந்துள்ளது. அதனை சாப்பிட்டு இறந்துள்ளது என பசுவின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுளள்ளனர்.  பசுக்களை கொள்ளுவதற்காக அங்கு மர்ம நபர்கள் குருனை மருந்தை கொட்டி வைத்தருக்க கூடும் என பசுக்களின் உரிமையாளர்கள் புகார் அடிப்படையில் பிரேத பரிசோதனை செய்ய கால்நடை துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும்மண்டபம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தி விஷம் வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.