ETV Bharat / state

களேபரமாகும் வேங்கைவயல் விவகாரம்.. 3 சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு.. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

author img

By

Published : Mar 14, 2023, 7:15 PM IST

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளி ஆட்களை கிராமத்தினுள் அனுமதிக்கக் கூடாது என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேங்கைவயல் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வேங்கைவயல் கிராமத்தினர்!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வேங்கைவயல் கிராமத்தினர்!
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளி ஆட்களை கிராமத்தினுள் அனுமதிக்கக் கூடாது என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேங்கைவயல் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை: கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும், காவல் துறையினரின் விசாரணையில் விரைவுத் தன்மை இல்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இதனால் இந்த வழக்கு விசாரணையானது சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் 75 நாட்களுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 13) மலம் கலக்கப்பட்ட குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடிக்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தொட்டியின் மேல் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் வேங்கைவயல் பொதுமக்கள், ‘எங்கள் பகுதியில் வேறு யாரேனும் உள்ளே நுழையக் கூடாது’ என்று சொல்லி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை காவல் நிலையம் சென்று பார்த்தபோது, சம்பந்தப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை விடுவித்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கறம்பக்குடி கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர், வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதற்கு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்தையா மற்றும் இறையூரைச் சேர்ந்த 3 பள்ளி சிறுவர்கள் ஆகியோரது பெயர்களைக் குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டி உள்ளார். பின்னர் இது தொடர்பாக செல்வம் என்பவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுவர்களின் மீது குற்றச்சாட்டை சுமத்தியும், அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலும் நோட்டீஸ் ஒட்டிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நேற்று அத்துமீறி வேங்கைவையல் பகுதிக்குள் நுழைந்து குடிநீர் தொட்டியை இடிக்க முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் எனவும் முழக்கம் எழுப்பினர்.

மேலும் தேவையில்லாத நபர்களை வேங்கைவயல் கிராமத்திற்கு உள்ளே நுழைய தடை விதிக்க வேண்டும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி ராகவி, வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றபோது, மாவட்ட ஆட்சியர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே உள்ள புதுக்கோட்டை - மணப்பாறை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஊராட்சி மன்றத் தலைவர், போஸ்டர் அடித்து ஒட்டிய செல்வம், குற்றம் சாட்டப்பட்ட 3 மாணவர்கள் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் அளித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வெளி ஆட்களை கிராமத்தினுள் அனுமதிக்கக் கூடாது என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேங்கைவயல் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை: கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பொருட்டு, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும், காவல் துறையினரின் விசாரணையில் விரைவுத் தன்மை இல்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இதனால் இந்த வழக்கு விசாரணையானது சிபிசிஐடி காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் 75 நாட்களுக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 13) மலம் கலக்கப்பட்ட குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடிக்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தொட்டியின் மேல் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் வேங்கைவயல் பொதுமக்கள், ‘எங்கள் பகுதியில் வேறு யாரேனும் உள்ளே நுழையக் கூடாது’ என்று சொல்லி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாலை காவல் நிலையம் சென்று பார்த்தபோது, சம்பந்தப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரை விடுவித்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கறம்பக்குடி கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவர், வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதற்கு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முத்தையா மற்றும் இறையூரைச் சேர்ந்த 3 பள்ளி சிறுவர்கள் ஆகியோரது பெயர்களைக் குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டி உள்ளார். பின்னர் இது தொடர்பாக செல்வம் என்பவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுவர்களின் மீது குற்றச்சாட்டை சுமத்தியும், அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலும் நோட்டீஸ் ஒட்டிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நேற்று அத்துமீறி வேங்கைவையல் பகுதிக்குள் நுழைந்து குடிநீர் தொட்டியை இடிக்க முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் எனவும் முழக்கம் எழுப்பினர்.

மேலும் தேவையில்லாத நபர்களை வேங்கைவயல் கிராமத்திற்கு உள்ளே நுழைய தடை விதிக்க வேண்டும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி ராகவி, வட்டாட்சியர் விஜயலட்சுமி மற்றும் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றபோது, மாவட்ட ஆட்சியர் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். இதனையடுத்து காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே உள்ள புதுக்கோட்டை - மணப்பாறை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஊராட்சி மன்றத் தலைவர், போஸ்டர் அடித்து ஒட்டிய செல்வம், குற்றம் சாட்டப்பட்ட 3 மாணவர்கள் உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் அளித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க: வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.