ETV Bharat / state

வேன் மீது பைக் மோதி விபத்து: சம்பவ இடத்திலே இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு - pudukottai crime news

புதுக்கோட்டை: திருமயம் அருகே இருசக்கர வாகனம் வேனுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பைக் விபத்து
பைக் விபத்து
author img

By

Published : Feb 25, 2020, 10:39 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நகரத்துபட்டியைச் சேர்ந்தவர்கள் மெய்யப்பன் மகன் கார்த்திக் (26), மலையப்பன் மகன் லோகேஷ் (27). இதில் கார்த்திக் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தால் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பியிருந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருமயம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, புலிவளம் விலக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிரே வந்த வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் வேன் மீது மோதி விபத்துக்குளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நமணசமுதிரம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குளிர்பானத்தில் மது... மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த பள்ளி மாணவன் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நகரத்துபட்டியைச் சேர்ந்தவர்கள் மெய்யப்பன் மகன் கார்த்திக் (26), மலையப்பன் மகன் லோகேஷ் (27). இதில் கார்த்திக் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சத்தால் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பியிருந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருமயம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, புலிவளம் விலக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த வாகனம், எதிரே வந்த வங்கிக்கு பணம் எடுத்துச் செல்லும் வேன் மீது மோதி விபத்துக்குளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நமணசமுதிரம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குளிர்பானத்தில் மது... மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த பள்ளி மாணவன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.