ETV Bharat / state

மாவட்ட வருவாய் அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட சக அலுவலர்கள்

author img

By

Published : Jan 30, 2020, 8:43 AM IST

புதுக்கோட்டை: வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரின் அலுவலகம் முற்றுகை
புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரின் அலுவலகம் முற்றுகை

புதுக்கோட்டையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 36 துணை வட்டாட்சியர் பணியிடங்களை நியமனம்செய்தார். இந்நிலையில் தமிழ் மாநில வருவாய் அலுவலர் சங்கத்தினர் உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று கூறி துணை வட்டாட்சியர் பணி நியமனத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

இது குறித்து மாநில வருவாய் நிர்வாக ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் இதனைப் பரிசீலித்த வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட ஆட்சியர் நியமனம்செய்த 36 துணை வட்டாட்சியர் பணியிடங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டும் நியமனம் செய்த 36 துணை வட்டாட்சியர் பணியிடங்களை இதுநாள் வரை ரத்துசெய்யாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரின் அலுவலகம் முற்றுகை

இதையும் படிங்க:

ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று !

புதுக்கோட்டையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 36 துணை வட்டாட்சியர் பணியிடங்களை நியமனம்செய்தார். இந்நிலையில் தமிழ் மாநில வருவாய் அலுவலர் சங்கத்தினர் உரிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று கூறி துணை வட்டாட்சியர் பணி நியமனத்தை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.

இது குறித்து மாநில வருவாய் நிர்வாக ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் இதனைப் பரிசீலித்த வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட ஆட்சியர் நியமனம்செய்த 36 துணை வட்டாட்சியர் பணியிடங்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டும் நியமனம் செய்த 36 துணை வட்டாட்சியர் பணியிடங்களை இதுநாள் வரை ரத்துசெய்யாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலரின் அலுவலகம் முற்றுகை

இதையும் படிங்க:

ஈழம் காக்க ஈகம் செய்த முத்துக்குமாரின் நினைவு நாள் இன்று !

Intro:Body:வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 36 துணை வட்டாட்சியர் பணியிடங்களை நியமனம் செய்தார், இந்நிலையில் தமிழ் மாநில வருவாய் அலுவலர் சங்கத்தினர் உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வில்லை என்று கூறி துணை வட்டாட்சியர் பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர், இதுகுறித்து மாநில வருவாய் நிர்வாக ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பிருந்த நிலையில் இதனை பரிசீலித்த வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட ஆட்சியர் நியமனம் செய்த 36 துணை வட்டாட்சியர் பணியிடங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார், இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டும் இதுநாள்வரை நியமனம் செய்த 36 துணை வட்டாட்சியர் பணியிடங்களை ரத்து செய்யாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.