ETV Bharat / state

குளக்கரை முட்புதரில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு! - அன்னவாசல் அருகே மலைப்பாம்பை பிடித்த இளைஞர்கள்

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே குளக்கரை முட்புதரிலிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குளக்கரை முட்புதரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
குளக்கரை முட்புதரில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
author img

By

Published : Dec 25, 2019, 9:28 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பெருமாநாடு குளக்கரை முட்புதரில் சரசரவென சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து குளக்கரையிலிருந்த இளைஞர்கள் சிலர், முட்புதரில் என்னவென்று பார்த்தபோது முட்புதரில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நகரமுடியாமல் இருந்துள்ளது.

இதனைக் கண்ட இளைஞர்கள், அந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் மலைப்பாம்பு யாருக்கும் பிடிகொடுக்காமல் போக்கு காட்டியது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் இளைஞர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் இளைஞர்கள் மலைப்பாம்பை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புக்காட்டில் பத்திரமாகவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: செம்மறி ஆட்டை சுற்றிவளைத்த மலைப்பாம்பை வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பெருமாநாடு குளக்கரை முட்புதரில் சரசரவென சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து குளக்கரையிலிருந்த இளைஞர்கள் சிலர், முட்புதரில் என்னவென்று பார்த்தபோது முட்புதரில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நகரமுடியாமல் இருந்துள்ளது.

இதனைக் கண்ட இளைஞர்கள், அந்த மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் மலைப்பாம்பு யாருக்கும் பிடிகொடுக்காமல் போக்கு காட்டியது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் இளைஞர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் இளைஞர்கள் மலைப்பாம்பை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர் மலைப்பாம்பை நார்த்தாமலை காப்புக்காட்டில் பத்திரமாகவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: செம்மறி ஆட்டை சுற்றிவளைத்த மலைப்பாம்பை வனப்பகுதியில் விட்ட வனத்துறையினர்

Intro:Body:

பெருமாநாட்டில் பிடிபட்ட மலைபாம்பு நார்த்தாமலை வனப்பகுதியில் விடப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள பெருமாநாடு குளக்கரையில் முள்வேளிபகுதியில் சரசரவேன வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அங்கு சென்று பார்த்த போது சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று முட்புதருக்குள் நகரமுடியாமல் திணறி கொண்டிரு்துள்ளது இதனைகண்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அந்த மலைபாம்பை பிடிக்க முயன்றனர்.
ஆனால் யாருக்கும் பிடிகொடுக்காமல் பாம்பு போக்கு காட்டியது. இதனையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மலைப்பாம்பு பிடிபட்டது.

பிடிபட்ட மலைபாம்பை சாக்கு பையில் அடைத்து வனத்துறைக்கு தகவல் தகவலளித்தனர்.பின்னர் நிகழ்விடம் வந்த வனத்துறையினரிடம் மலைப்பாம்பு ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த மலைபாம்பை நார்த்தாமலை காப்புகாட்டில் விடப்பட்டது. பிடிப்பட்ட மலைப்பாம்பு சுமார் 10 அடி நீளமும் 20-கிலோ எடையும் இருந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.