புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ் என்பவர் வங்கிகளில் லோன் வாங்கி தருவதாகக் கூறி விஸ்டிங்கார்ட், துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளார். அவரின் இந்த விளம்பரத்தை பார்த்த இலுப்பூர் அருகே உள்ள மாரப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (30) என்பவர் பிரகாஷை போனில் தொடர்புகொண்டு தனக்கு பத்து லட்சம் லோன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.
![money forgery case 1 arrested and seized 1.50 lakhs](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-02-iluppur-cheater-image-scr-7204435_05102019145127_0510f_1570267287_1016.jpg)
இதையடுத்து ஜெயராஜின் வீட்டிற்குச் சென்ற பிரகாஷ், அவரிடம் அசல் ஆவணங்களை பார்க்க வேண்டும் எனக் கூறி அனைத்தையும் பார்த்திருக்கிறார். அப்போது அவரது ஏடிஎம் கார்டை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக போலி ஏடிஎம் கார்ட்டை ஜெயராஜிடம் கொடுத்துள்ளார். மேலும், வங்கியில் பத்து லட்சம் லோன் பெற வேண்டுமென்றால் உங்களின் வங்கி கணக்கில் ரூ. 1.50 லட்சம் பணம் இருக்க வேண்டும் என்று கூறிய பிரகாஷ், பணத்தை வங்கியில் செலுத்தியவுடன் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார்.
இதை உண்மை என நம்பிய ஜெயராஜ், மறுநாள் அவரது வங்கி கணக்கில் ரூ.1.50 லட்சம் செலுத்தியுள்ளார், பின் பணத்தை போட்ட விபரத்தையும் பிரகாஷ்சிடம் கூறியுள்ளார். இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திய பிரகாஷ் பணத்தை எடுத்துகொண்டார்.