ETV Bharat / state

பிறந்த குழந்தைக்கு 3 மணி நேர அறுவை சிகிச்சை: ரத்தக்கட்டியை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை! - மீனாட்சி சுந்தரம்

புதுக்கோட்டை: பிறந்த குழந்தைக்கு காலில் இருந்த ரத்தக்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர்  pudhukottai govt hospital acheviement  Pudukkottai  deadn meenakshi sundaram  மீனாட்சி சுந்தரம்  பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை
பிறந்த குழந்தைக்கு 3மணி நேர அறுவை சிகிச்சை: ரத்தக்கட்டியை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை
author img

By

Published : Jun 28, 2020, 6:18 PM IST

Updated : Jun 30, 2020, 1:34 PM IST

ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், புவனேஸ்வரி தம்பதியினருக்கு ஜூன் எட்டாம் தேதி அறந்தாங்கி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பிறக்கும்போதே வலது முழங்கால் பகுதியில் ஒரு ரத்தக்கட்டி இருந்ததனால், மேல்சிகிச்சைக்காக அக்குழந்தை அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

பத்தாம் தேதி அனுமதிக்கப்பட்ட அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற முடிவு எடுத்து இன்று அறுவை சிகிச்சை செய்தனர். மூன்று மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம் ரத்தக்கட்டி அகற்றப்பட்டது. இக்குழந்தை நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து பேசிய மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், "இந்தக் குழந்தைக்கு காலில் ரத்தக்கட்டி இருந்ததனால் கால் தரையில் பட்டாலே ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இந்நிலையில் எந்த ரத்தக் குழாயில் இருந்து இந்த ரத்த நாள முடிச்சுகள் உருவாகின என்று கண்டறிந்து அந்த ரத்த நாளத்தில் இருந்து இந்த கட்டியைப் பிரித்து மிக நுண்ணிய அளவிலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.

தொடைப்பகுதியில் இருந்து தோலை எடுத்து ஒட்டாமல்; இருக்கும் இடத்திலேயே நவீன முறையில் 'பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தது பாராட்டத்தக்கதாகும். இந்த குறைபாடு பெண் குழந்தைகளுக்குதான் அதிக அளவில் காணப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகக் கூடிய இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட பஞ்சு? - மருத்துவர்களைக் குற்றஞ்சாட்டும் கணவர்

ராமநாதபுரம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், புவனேஸ்வரி தம்பதியினருக்கு ஜூன் எட்டாம் தேதி அறந்தாங்கி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பிறக்கும்போதே வலது முழங்கால் பகுதியில் ஒரு ரத்தக்கட்டி இருந்ததனால், மேல்சிகிச்சைக்காக அக்குழந்தை அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

பத்தாம் தேதி அனுமதிக்கப்பட்ட அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற முடிவு எடுத்து இன்று அறுவை சிகிச்சை செய்தனர். மூன்று மணி நேர அறுவை சிகிச்சையின் மூலம் ரத்தக்கட்டி அகற்றப்பட்டது. இக்குழந்தை நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து பேசிய மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், "இந்தக் குழந்தைக்கு காலில் ரத்தக்கட்டி இருந்ததனால் கால் தரையில் பட்டாலே ரத்தக் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. இந்நிலையில் எந்த ரத்தக் குழாயில் இருந்து இந்த ரத்த நாள முடிச்சுகள் உருவாகின என்று கண்டறிந்து அந்த ரத்த நாளத்தில் இருந்து இந்த கட்டியைப் பிரித்து மிக நுண்ணிய அளவிலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.

தொடைப்பகுதியில் இருந்து தோலை எடுத்து ஒட்டாமல்; இருக்கும் இடத்திலேயே நவீன முறையில் 'பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தது பாராட்டத்தக்கதாகும். இந்த குறைபாடு பெண் குழந்தைகளுக்குதான் அதிக அளவில் காணப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகக் கூடிய இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இங்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட பஞ்சு? - மருத்துவர்களைக் குற்றஞ்சாட்டும் கணவர்

Last Updated : Jun 30, 2020, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.