ETV Bharat / state

பயிர் காப்பீட்டுத் தொகை விவகாரம்: புதுக்கோட்டை ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு - pudukkottai farmers demand collector to give crop insurance amoun

புதுக்கோட்டை: கஜா புயலின்போது பாதிப்படைந்த பயிர்களுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை இன்னும் ஏன் எங்களுக்கு வழங்கவில்லை என்று விவசாயிகள் அரசு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர்க்கும் கூட்டத்தில் சராமரியாக கேள்வி எழுப்பி முறையிட்டனர்.

farmers argument with pudukkottai collector
author img

By

Published : Oct 25, 2019, 4:04 PM IST

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொணடு தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

அப்போது, "புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், கஜா புயலின்போது எங்கள் பயிர்கள் மிகவும் பாதிப்படைந்தது. பாதிப்படைந்த பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகை இதுவரையிலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் அனைவருக்கும் காப்பீட்டுத்தொகை கிடைத்துவிட்டது.

கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு மட்டும் இன்னும் காப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை" என்று மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பி முறையிட்டனர்.

புதுக்கோட்டை ஆட்சியரிடம் விவசாயிகள் வாக்குவாதம்

உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்புகொண்டு பேசினார். பின்னர், தீபாவளிக்குள் காப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் பொன்னுச்சாமி பேசுகையில், "ஓராண்டுக்கும் மேலாக இந்தக் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சோகத்திலுள்ளனர்.

அலுவலர்களிடம் இதுபற்றி முறையிட்டால் இன்னும் பணம் வரவில்லையென்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். நிலைமை இப்படியே தொடர்ந்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மனு கொடுத்த விவசாயிகள்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொணடு தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

அப்போது, "புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், கஜா புயலின்போது எங்கள் பயிர்கள் மிகவும் பாதிப்படைந்தது. பாதிப்படைந்த பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகை இதுவரையிலும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் அனைவருக்கும் காப்பீட்டுத்தொகை கிடைத்துவிட்டது.

கஜா புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு மட்டும் இன்னும் காப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை" என்று மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பி முறையிட்டனர்.

புதுக்கோட்டை ஆட்சியரிடம் விவசாயிகள் வாக்குவாதம்

உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களைத் தொடர்புகொண்டு பேசினார். பின்னர், தீபாவளிக்குள் காப்பீட்டுத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் பொன்னுச்சாமி பேசுகையில், "ஓராண்டுக்கும் மேலாக இந்தக் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சோகத்திலுள்ளனர்.

அலுவலர்களிடம் இதுபற்றி முறையிட்டால் இன்னும் பணம் வரவில்லையென்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். நிலைமை இப்படியே தொடர்ந்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.

இதையும் படிங்க: ஆட்சியர் அலுவலகத்தில் மண்டியிட்டு மனு கொடுத்த விவசாயிகள்!

Intro:Body: எங்களுக்கு பயிர்காப்பீடு இன்னும் ஏன் வழங்கவில்லை? என அதிகாரிகளை சரமாரியாக கேள்வி கேட்ட விவசாயிகள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு.



புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் குறைகளை எடுத்துச் சொல்ல வந்திருந்தனர். அப்போது இதுவரையிலும் எங்களுக்கு பயிர்க்காப்பீடு வழங்கவில்லை புதுக்கோட்டை மாவட்டத்தில் 15000 விவசாயிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ஆனால் இதுவரை அதை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை என்று விவசாயிகள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது விவசாயிகளிடம் இன்னும் அரை மணி நேரம் காத்திருங்கள் உங்களுக்கான வரும் கிடைக்கும் கூறியுள்ளார்.


இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பொன்னுசாமி தெரிவித்ததாவது,

விடிந்தால் தீபாவளி நாளை எப்படி கொண்டாடுவது அவர்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறோம் எனக்கு வரவேண்டிய எந்த ஒரு இடத்திலும் வரவில்லை அதிகாரிகளிடம் கேட்டால் அரசுக்கு இன்னும் பணம் வரவில்லை என்று அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர் அப்படியானால் அதிகாரிகள் என்னதான் வேலை செய்கிறார்கள் இப்படியே போனால் விவசாயம் வளரும் இந்த நிலைமை தொடர்ந்தால் விவசாயிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.