ETV Bharat / state

புதுக்கோட்டையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு! - Covid-19 News

புதுக்கோட்டை: மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தின் கரோனா சிறப்பு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

New Covid-19 Section started in Pudukottai GH
New Covid-19 Section started in Pudukottai GH
author img

By

Published : Aug 14, 2020, 4:47 PM IST

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மூன்றடுக்கு கட்டடத்தில் தற்போது கோவிட் 19 சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள் யோகா மையம் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 2000 படுக்கைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

இன்று திறக்கப்பட்டுள்ள கோவிட் 19 சிறப்பு மருத்துவமனையில் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு நிகரான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இரண்டு தனியார் மருத்துவமனை நிர்வாகம் கோவிட் 19 சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது. புதுக்கோட்டையில் சித்தா சிகிச்சை சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

இதையும் படிங்க: கூட்டுறவுத் துறையில் யார் தவறு செய்தாலும் தப்பமுடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மூன்றடுக்கு கட்டடத்தில் தற்போது கோவிட் 19 சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள வார்டுகள் யோகா மையம் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 2000 படுக்கைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு

இன்று திறக்கப்பட்டுள்ள கோவிட் 19 சிறப்பு மருத்துவமனையில் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு நிகரான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இரண்டு தனியார் மருத்துவமனை நிர்வாகம் கோவிட் 19 சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளது. புதுக்கோட்டையில் சித்தா சிகிச்சை சிறப்பான முறையில் அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

இதையும் படிங்க: கூட்டுறவுத் துறையில் யார் தவறு செய்தாலும் தப்பமுடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.