ETV Bharat / state

பள்ளிக் குழந்தைகள் 20 பேருக்கு காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Jun 22, 2019, 12:12 PM IST

புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே 20 பள்ளிக் குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கோயில்நாங்குப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.

இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு எற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டடுள்ளது. இதையடுத்து, அன்னவாசல் இலுப்பூர் கீரனூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு எதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பது ஆய்வுக்குப் பின்னரே தெரியும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கோயில்நாங்குப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.

இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு எற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டடுள்ளது. இதையடுத்து, அன்னவாசல் இலுப்பூர் கீரனூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு எதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பது ஆய்வுக்குப் பின்னரே தெரியும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Intro:புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே 20 பள்ளி குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதி


Body:புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 20 குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் காரணமாக இலுப்பூர் அன்னவாசல் கீரனூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கோயில்நாங்குப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 45 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். மாலை பள்ளி விடும் நேரத்திற்கு முன்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டு உள்ளது இதனால் வகுப்பு ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர் அதன்படி பெற்றோர்கள் வந்து காய்ச்சல் ஏற்பட்டு உள்ள குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் சில மாணவர்களை ஆசிரியர்களே வீட்டில் கொண்டு விட்டுள்ளனர் மேலும் தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து தங்களின் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு அதிகமான காய்ச்சலும் வாழ்வையும் ஏற்பட்டதால் அன்னவாசல் இலுப்பூர் கீரனூர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது பள்ளி குழந்தைகளுக்கு இதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பது சுகாதாரத்துறையினரின் ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். பள்ளி குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்ட செய்தி பரவியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.