புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் உச்சிப்பாறை குளத்தில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் படைவீரர்கள் விரைந்து வந்து அந்த உடலை மீட்டு திருமயம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் இது குறித்து துணை ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டவுன், வீரய்யன்கண்மாய் வடக்கு பகுதியை சேர்ந்த பால முருகன்(52) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு வந்துள்ளார். மேலும் இவரது பேக்கில் மது பாட்டில் ஒன்று இருந்துள்ளது தெரியவந்தது. மேலும் இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: தட்டி கேட்ட போலீசை தாக்கிய இறைச்சி கடை உரிமையாளர்!