ETV Bharat / state

'அழகிழக்கும் அர்த்தமுள்ள வரலாறு' -அரசின் அலட்சியமா?

author img

By

Published : Oct 13, 2020, 2:51 PM IST

'தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே' என்று திருமூலர் சொன்ன குருபக்திக்கு உதாராணமாய் வாழ்ந்த நாயனார் கோயிலோ அவ்வளவு தெளிவாக பாதுகாக்கப்படவில்லை. இந்த அலட்சியம் எத்தனையோ வரலாற்று சின்னங்களை அழித்து விட்டது. அதனால் வரலாற்று சிறப்புகளுடைய தேவர் மலையை முறையாக பரமாரித்தால் இந்த வரலாறு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் என்பது திண்ணம்.

குடைவரைக் கோயில்
குடைவரைக் கோயில்

புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது தேவர்மலை. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள தேவர் மலை பாண்டியர் கால கல்வெட்டு, குடைவரைக்கோயில்கள் என தொன்மைகள் நிறைந்தது. நிழல் தரும் நாவல் மரம், சுவை தரும் தண்ணீர் சுனை மட்டுமல்லாது வணங்கவும் வழிபாடு செய்யவும் ஜீவ சமாதி சன்னதியும் இங்கு அமைந்துள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலைக் குறும்ப நாயனார்தான் இங்கு ஜூவ சமாதி அடைந்துள்ளார்.

'அழகிழக்கும் அர்த்தமுள்ள வரலாறு...' -அரசின் அலட்சியமா?

இவர் யோக கலை, அட்டமா சித்தியில் வல்லவர். நாயன்மார்கள் இரு வகையில் இறைவனை அடைந்தனர். ஒரு சார்பின்ர் சிவனையே கடவுளாக கொண்டும் அவருக்கு திருத்தொண்டு செய்வதில் தன்னை அர்பணிந்தும் வாழந்தவர்கள். மற்றொரு சார்பினர் சிவனடியார்களை குருவாகவும் கடவுளாகவும் கொண்டு அவர்களுக்கு திருத்தொண்டு செய்வதில் வேட்கை உடையவர்கள்.

பெருமிழலைக் குறும்ப நாயனாரோ, சுந்தர மூர்த்தி நாயனாரை குருவாக கொண்டு "பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்" என்று அவராலே திருத்தொண்டத்தொகையில் பாடப்பட்டவர். சுந்தரர் நாளை கயிலை செல்ல இருக்கிறார் என்பதைத் தன் உள்ளக்குறிப்பால் உணர்ந்து அவருக்கு முன்பாக ஜீவ சமாதி மேற்கொண்டு அங்கு சென்றவர். இவரின் குருபக்தியை "மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்' என பெரியபுராணத்தில் சேக்கிழாரும் குறிப்பிடுகிறார்.

பாண்டியர் கால கல்வெட்டு
பாண்டியர் கால கல்வெட்டு

இவ்வளவு சிறப்பு மிக்க பெருமிழலைக் குறும்ப நாயனாரின் ஜீவ சமாதி திருக்கோயில் முறையாக பாதுக்காப்படுகிறதா என்றால் அதுதான் இல்லை. இந்த கோயிலின் சிறப்பும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கே சரிவர தெரியவில்லை. எந்நேரமும் பூட்டியே இருக்கும் கருவறை எப்போதுதான் திறக்கப்படும் என்று அவ்வூர் மக்களிடம் விசாரித்தோம்.

'9ஆம் நூற்றாண்டு கல் செக்கு' - ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் என்ன தொடர்பு?

இது குறித்து பேசிய ரெங்கராஜன், "வருடந்தோறும் ஆடி சித்திரையில் நாயனாருக்கு குருபூஜை நடைபெறும். இந்த விழாவிற்கு சுற்றவட்டாரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து வழிபாடு செய்வர். சுமார் 4000 பேர் வருகை தந்து கோயில் ஜகஜோதியாக இருக்கும். அன்னதானமும் நடைபெறும். கரோனா காரணமாக இந்த ஆண்டு அன்னதானம் நடைபெறவில்லை" என்றார்.

குடைவரைக் கோயில்
குடைவரைக் கோயில்

அதே பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் எடிசன், "இந்த கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. ஆனால் இந்த கோயில் காட்டுப்பகுதிக்குள் அமைந்திருப்பதாலும் சாலை வசதி இல்லாததாலும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் பலருக்கே தெரியவில்லை. மேலும் இப்பகுதிகளில் மது பிரியர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பெண்கள் கோயிலுக்கு வருவதற்கே அஞ்சுகின்றனர். அதனால் தொல்லியல் துறை முறையான பாதுகாப்பை ஏற்படுத்தினால் இந்த வரலாறு தலைமுறைகள் தாண்டி ஆவணமாகும்" என்றார்.

வற்றாத சுனை
வற்றாத சுனை

'தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே' என்று திருமூலர் சொன்ன குருபக்திக்கு உதாராணமாய் வாழ்ந்த நாயனார் கோயிலோ அவ்வளவு தெளிவாக பாதுகாக்கப்படவில்லை. இந்த அலட்சியம் எத்தனையோ வரலாற்று சின்னங்களை அழித்து விட்டது. அதனால் வரலாற்று சிறப்புகளுடைய தேவர் மலையை முறையாக பரமாரித்தால் இந்த வரலாறு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் என்பது திண்ணம்.

புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது தேவர்மலை. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள தேவர் மலை பாண்டியர் கால கல்வெட்டு, குடைவரைக்கோயில்கள் என தொன்மைகள் நிறைந்தது. நிழல் தரும் நாவல் மரம், சுவை தரும் தண்ணீர் சுனை மட்டுமல்லாது வணங்கவும் வழிபாடு செய்யவும் ஜீவ சமாதி சன்னதியும் இங்கு அமைந்துள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலைக் குறும்ப நாயனார்தான் இங்கு ஜூவ சமாதி அடைந்துள்ளார்.

'அழகிழக்கும் அர்த்தமுள்ள வரலாறு...' -அரசின் அலட்சியமா?

இவர் யோக கலை, அட்டமா சித்தியில் வல்லவர். நாயன்மார்கள் இரு வகையில் இறைவனை அடைந்தனர். ஒரு சார்பின்ர் சிவனையே கடவுளாக கொண்டும் அவருக்கு திருத்தொண்டு செய்வதில் தன்னை அர்பணிந்தும் வாழந்தவர்கள். மற்றொரு சார்பினர் சிவனடியார்களை குருவாகவும் கடவுளாகவும் கொண்டு அவர்களுக்கு திருத்தொண்டு செய்வதில் வேட்கை உடையவர்கள்.

பெருமிழலைக் குறும்ப நாயனாரோ, சுந்தர மூர்த்தி நாயனாரை குருவாக கொண்டு "பெருமிழலைக் குறும்பர்க்கும் அடியேன்" என்று அவராலே திருத்தொண்டத்தொகையில் பாடப்பட்டவர். சுந்தரர் நாளை கயிலை செல்ல இருக்கிறார் என்பதைத் தன் உள்ளக்குறிப்பால் உணர்ந்து அவருக்கு முன்பாக ஜீவ சமாதி மேற்கொண்டு அங்கு சென்றவர். இவரின் குருபக்தியை "மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்' என பெரியபுராணத்தில் சேக்கிழாரும் குறிப்பிடுகிறார்.

பாண்டியர் கால கல்வெட்டு
பாண்டியர் கால கல்வெட்டு

இவ்வளவு சிறப்பு மிக்க பெருமிழலைக் குறும்ப நாயனாரின் ஜீவ சமாதி திருக்கோயில் முறையாக பாதுக்காப்படுகிறதா என்றால் அதுதான் இல்லை. இந்த கோயிலின் சிறப்பும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கே சரிவர தெரியவில்லை. எந்நேரமும் பூட்டியே இருக்கும் கருவறை எப்போதுதான் திறக்கப்படும் என்று அவ்வூர் மக்களிடம் விசாரித்தோம்.

'9ஆம் நூற்றாண்டு கல் செக்கு' - ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் என்ன தொடர்பு?

இது குறித்து பேசிய ரெங்கராஜன், "வருடந்தோறும் ஆடி சித்திரையில் நாயனாருக்கு குருபூஜை நடைபெறும். இந்த விழாவிற்கு சுற்றவட்டாரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து வழிபாடு செய்வர். சுமார் 4000 பேர் வருகை தந்து கோயில் ஜகஜோதியாக இருக்கும். அன்னதானமும் நடைபெறும். கரோனா காரணமாக இந்த ஆண்டு அன்னதானம் நடைபெறவில்லை" என்றார்.

குடைவரைக் கோயில்
குடைவரைக் கோயில்

அதே பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் எடிசன், "இந்த கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. ஆனால் இந்த கோயில் காட்டுப்பகுதிக்குள் அமைந்திருப்பதாலும் சாலை வசதி இல்லாததாலும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மக்கள் பலருக்கே தெரியவில்லை. மேலும் இப்பகுதிகளில் மது பிரியர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பெண்கள் கோயிலுக்கு வருவதற்கே அஞ்சுகின்றனர். அதனால் தொல்லியல் துறை முறையான பாதுகாப்பை ஏற்படுத்தினால் இந்த வரலாறு தலைமுறைகள் தாண்டி ஆவணமாகும்" என்றார்.

வற்றாத சுனை
வற்றாத சுனை

'தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே' என்று திருமூலர் சொன்ன குருபக்திக்கு உதாராணமாய் வாழ்ந்த நாயனார் கோயிலோ அவ்வளவு தெளிவாக பாதுகாக்கப்படவில்லை. இந்த அலட்சியம் எத்தனையோ வரலாற்று சின்னங்களை அழித்து விட்டது. அதனால் வரலாற்று சிறப்புகளுடைய தேவர் மலையை முறையாக பரமாரித்தால் இந்த வரலாறு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் என்பது திண்ணம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.