ETV Bharat / state

'காவலர்கள் சுட்டுக் கொன்றால், நீதிமன்றங்களை இனி மூடிவிடலாமா?' - திருநாவுக்கரசர் - thirunavukkarasar MP pressmeet

புதுக்கோட்டை: குற்றவாளிகளை காவல் துறையினரே சுட்டுக் கொன்றால், நீதிமன்றங்களை மூடிவிடலாமா என்று திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

If the police shoot the criminals, Can we close the all courts, ask thirunavukkarasar MP
If the police shoot the criminals, Can we close the all courts, ask thirunavukkarasar MP
author img

By

Published : Dec 7, 2019, 10:10 PM IST

திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், புதுக்கோட்டை ராஜ கோபாலபுரத்திலுள்ள மக்களவைத் தொகுதி அலுவலத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு பின்னர் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலைப்போல் காங்கிரஸ்-திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றிபெறும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தலைவிட நேரடித் தேர்தலே முறையானதாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அரசின் அறிவிப்புகள் பாதிக் கடலைத் தாண்டியதாக உள்ளது.

திருநாவுக்கரசர் எம்பி பேட்டி

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் நீதிமன்றம், விசாரணை ஆணையங்கள் இருக்கும்போது, தெலங்கானாவில் காவல் துறையினர் என்கவுன்டர் என்ற பெயரில் குற்றவாளிகளை சுட்டுக்கொன்றது விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.

நீதிமன்றங்கள் முறையாக விசாரணை செய்து மரண தண்டனை கூட வழங்கலாம் என்று கூறிய அவர், குற்றவாளிகளைக் காவல் துறையினர் சுட்டுக் கொன்றால், நீதிமன்றங்களை மூடிவிடலாமா? எனக் கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இவர்கள் இருக்கும்வரை தேர்தல் நடக்காது - மாணிக்கம் தாகூர் எம்.பி.

திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், புதுக்கோட்டை ராஜ கோபாலபுரத்திலுள்ள மக்களவைத் தொகுதி அலுவலத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு பின்னர் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலைப்போல் காங்கிரஸ்-திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றிபெறும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தலைவிட நேரடித் தேர்தலே முறையானதாக இருக்கும். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அரசின் அறிவிப்புகள் பாதிக் கடலைத் தாண்டியதாக உள்ளது.

திருநாவுக்கரசர் எம்பி பேட்டி

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் நீதிமன்றம், விசாரணை ஆணையங்கள் இருக்கும்போது, தெலங்கானாவில் காவல் துறையினர் என்கவுன்டர் என்ற பெயரில் குற்றவாளிகளை சுட்டுக்கொன்றது விசாரிக்கப்பட வேண்டும்" என்றார்.

நீதிமன்றங்கள் முறையாக விசாரணை செய்து மரண தண்டனை கூட வழங்கலாம் என்று கூறிய அவர், குற்றவாளிகளைக் காவல் துறையினர் சுட்டுக் கொன்றால், நீதிமன்றங்களை மூடிவிடலாமா? எனக் கேள்வியெழுப்பினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இவர்கள் இருக்கும்வரை தேர்தல் நடக்காது - மாணிக்கம் தாகூர் எம்.பி.

Intro:Body:குற்றவாளிகளை போலீசாரே சுட்டு கொல்வதென்றால் நீதிமன்றங்களை மூடி விடலாமா என்று திருச்சி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.

திருச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டை ராஜ கோபால புரத்தில் உள்ள புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி அலுவலத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு பின்னர் செய்தியாளர் சந்தித்தார் அப்போது அவர் கூறியது

பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது போல் காங்கிரஸ் திமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் அமோக வெற்றி பெறும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உறுப்பினர்களை மற்றும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தலைவிட நேரடித் தேர்தலே முறையானதாக இருக்கும் .எனவே நேரடி தேர்தலை வரவேற்கிறேன். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அரசின் அறிவிப்புகள் பாதி கடல் தாண்டியதாக உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் நீதிமன்றம் விசாரணை ஆணையங்கள் இருக்கும் போது தெலுங்கானாவில் போலீசார் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக்கொன்றது விசாரிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் முறையாக விசாரணை செய்து மரண தண்டனை கூட வழங்கலாம். குற்றவாளிகளை போலீசார் சுட்டுக் கொள்வது என்றால் நீதிமன்றங்களை மூடிவிடலாமா? யார் மீது எந்த புகார் கொடுத்தாலும் அவர்களை போலீசார் சுட்டுக் கொள்வது என்றால் என்னாவது வெங்காய விலை உயர்வால் முன்பு ஆட்சியே கவிழ்ந்து அதுபோல் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் முன் வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.