ETV Bharat / state

மான் வேட்டையாடிய அரசு அலுவலர் கைது - மான் வேட்டையாடிய வழக்கு

புதுக்கோட்டை: மான் வேட்டையாடிய வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் மான் வேட்டையாடிய அரசு அலுவலர் கைது
புதுக்கோட்டையில் மான் வேட்டையாடிய அரசு அலுவலர் கைது
author img

By

Published : Dec 4, 2019, 6:03 PM IST

புதுக்கோட்டை மறைமலை நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன்(46). இவர் சம்பவத்தன்று தன்னுடைய வாகனத்தில் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிறைத்துறை பெட்ரோல் பங்க் பகுதியில் வந்தபோது, விபத்தில் சிக்கினார். இது குறித்து தகவலறிந்த திருக்கோகர்ணம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ராபின்சன் வந்த வாகனத்தில் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்ட காவலர்கள், ரத்தக் கறைகள் குறித்து ராபின்சனிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது வாகனத்தில் ரத்தக் கறையுடன், இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களும் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் ராபின்சனை கைது செய்து, அவரிடம் இருந்த மூன்று துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் ராபின்சன் கொடுத்த தகவலின்படி, புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடி பகுதியைச் சேர்ந்த ராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், திருவப்பூரைச் சேர்ந்த ராஜேஸ், சுரேஷ், பாசிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, கீரனூர் எழில் நகரைச் சேர்ந்த சாமுவேல் பிரின்ஸ் ஆகியோர் மீது சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடியதாக திருக்கோகர்ணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் ராமன், ராஜேஸ், வெங்கடாஜலபதி, சாமிவேல் பிரின்ஸ் ஆகிய நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள காவலர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், சுரேஷ் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். இதில் காவலர் ராமச்சந்திரனை ஏற்கெனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

இத்தருணத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியனை, ஆட்சியர் உமா மகேஸ்வரி தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதயும் படிங்க:

புதுக்கோட்டையில் மான் வேட்டையாடிய அரசு அலுவலர் கைது

புதுக்கோட்டை மறைமலை நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன்(46). இவர் சம்பவத்தன்று தன்னுடைய வாகனத்தில் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிறைத்துறை பெட்ரோல் பங்க் பகுதியில் வந்தபோது, விபத்தில் சிக்கினார். இது குறித்து தகவலறிந்த திருக்கோகர்ணம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ராபின்சன் வந்த வாகனத்தில் ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்ட காவலர்கள், ரத்தக் கறைகள் குறித்து ராபின்சனிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது வாகனத்தில் ரத்தக் கறையுடன், இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களும் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் ராபின்சனை கைது செய்து, அவரிடம் இருந்த மூன்று துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் ராபின்சன் கொடுத்த தகவலின்படி, புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடி பகுதியைச் சேர்ந்த ராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் காவலர் ராமச்சந்திரன், புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், திருவப்பூரைச் சேர்ந்த ராஜேஸ், சுரேஷ், பாசிப்பட்டியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, கீரனூர் எழில் நகரைச் சேர்ந்த சாமுவேல் பிரின்ஸ் ஆகியோர் மீது சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடியதாக திருக்கோகர்ணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் ராமன், ராஜேஸ், வெங்கடாஜலபதி, சாமிவேல் பிரின்ஸ் ஆகிய நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள காவலர் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், சுரேஷ் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர். இதில் காவலர் ராமச்சந்திரனை ஏற்கெனவே மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

இத்தருணத்தில் இவ்வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியனை, ஆட்சியர் உமா மகேஸ்வரி தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதயும் படிங்க:

புதுக்கோட்டையில் மான் வேட்டையாடிய அரசு அலுவலர் கைது

Intro:Body:மான் வேட்டையாடிய வழக்கில்
துணை வட்டார வளர்ச்சி அதிகாரி தற்காலிக பணியிடை நீக்கம்
கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவு

மான் வேட்டையாடிய வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டு உள்ளார்.
3 துப்பாக்கிகள் பறிமுதல்
புதுக்கோட்டை மறைமலை நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராபின்சன்(வயது 46). இவர் சம்பவத்தன்று தன்னுடைய காரில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிறைத்துறை பெட்ரோல் பங்க் பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கினார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ராபின்சன் வந்த காரில் ரத்த கரைகள் இருப்பதை கண்ட போலீசார், ரத்த கரைகள் குறித்து ராபின்சனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது காரில் ரத்த கரையுடன் 2 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் ராபின்சனை கைது செய்து, அவரிடம் இருந்த 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தற்காலிக பணியிடை நீக்கம்
மேலும் ராபின்சன் கொடுத்த தகவலின்படி, புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடி பகுதியை சேர்ந்த ராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வரும் போலீஸ் ராமச்சந்திரன், புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், திருவப்பூரை சேர்ந்த ராஜேஸ், சுரேஷ், பாசிப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலபதி, கீரனூர் எழில் நகரை சேர்ந்த சாமுவேல் பிரின்ஸ் ஆகியோர் மீது சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடியதாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராமன், ராஜேஸ், வெங்கடாஜலபதி, சாமிவேல் பிரின்ஸ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள போலீஸ் ராமச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியன், சுரேஷ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதில் போலீஸ் ராமச்சந்திரனை ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியனை கலெக்டர் உமா மகேஸ்வரி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.