ETV Bharat / state

கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்

author img

By

Published : Jun 27, 2021, 2:33 PM IST

கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது மீனவர் நிலைதடுமாறி விழந்து மாயமாகியுள்ளார். அவரைக் கடலோர காவல் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடலில் தவறிவிழுந்த மீனவர் மாயம்
கடலில் தவறிவிழுந்த மீனவர் மாயம்

புதுக்கோட்டை: புதுக்குடி மீனவ கிராமத்திலிருந்து தினமணி என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் தினமணி (46), வசீகரன் (19) மணிகண்டன் (23) ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று( ஜுன் 26) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். 16 மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மீனவர் வசீகரன் படகின் எஞ்ஜின் பக்கம் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக அவரின் மீன் வலை எஞ்ஜின் மீது சிக்கி, வலையோடு தூக்கி கடலில் வீசப்பட்டுள்ளார். எஞ்ஜின் மீது மோதி அவர் நீரில் மூழ்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததையடுத்து, கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு வந்த கடலோர காவல் படையினர், சக மீனவர்களின் உதவியோடு இரண்டு விசைப்படகு, எட்டுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் தேடி வருகின்றனர்.

19 வயது மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போலி தடுப்பூசி போட்டு மயங்கி விழுந்த நடிகை!

புதுக்கோட்டை: புதுக்குடி மீனவ கிராமத்திலிருந்து தினமணி என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் தினமணி (46), வசீகரன் (19) மணிகண்டன் (23) ஆகிய மூன்று மீனவர்கள் நேற்று( ஜுன் 26) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். 16 மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மீனவர் வசீகரன் படகின் எஞ்ஜின் பக்கம் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக அவரின் மீன் வலை எஞ்ஜின் மீது சிக்கி, வலையோடு தூக்கி கடலில் வீசப்பட்டுள்ளார். எஞ்ஜின் மீது மோதி அவர் நீரில் மூழ்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததையடுத்து, கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் அங்கு வந்த கடலோர காவல் படையினர், சக மீனவர்களின் உதவியோடு இரண்டு விசைப்படகு, எட்டுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் தேடி வருகின்றனர்.

19 வயது மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போலி தடுப்பூசி போட்டு மயங்கி விழுந்த நடிகை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.