புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் உள்ள 17 வயது சிறுவன் கரோனா பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பதை பொதுச் சுகாதாரத் துறையினர் உறுதி செய்து இலுப்பூர் பேரூராட்சிக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வரச் சென்றபோது கரோனா தொற்று கண்டறியப்பட்ட அந்த சிறுவன் வீட்டிலிருந்து மாயமானது தெரியவந்தது. இதையறிந்த இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி, காவல் நிலையத்தில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட சிறுவன் மருத்துவமனைக்கு வராமல் நோய் பரப்பும் விதமாகச் சுற்றித் திரிந்து வருவதாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து சிறுவனை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை சார்பில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகள் உஷார் படுத்தப்பட்டு, வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சிறுவன் மாயமானது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜயபுராவில் பாதசாரி மீது கார் மோதி விபத்து: சிசிடிவி கேமரா வெளியீடு