ETV Bharat / state

மூன்று வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழப்பு - மூன்று வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழப்பு

புதுக்கோட்டை: மணமேல்குடி அருகே மூன்று வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழப்பு
author img

By

Published : Sep 25, 2019, 7:36 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் நைனா முகமது. இவரது மூன்று வயது மகன் ஆரிப் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இதனால் கோட்டைப்பட்டினம் அரசினர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக ஆரிப் கூட்டி செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாதாரண காய்ச்சல் என்று அனுப்பிவிட்டனர். இருந்தபோதிலும் காய்ச்சல் சரியாகததால் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று ஆரிப் இறந்துவிட்டதை அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சிறுவனின் தாய், மழைக்காலம் வந்துவிட்டதால் அவர்கள் இருக்கும் குடியிருப்பின் மோசமான சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது என்றார்.

மூன்று வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழப்பு

மேலும் தண்ணீரில் பாசிகள் படர்ந்து அசுத்தமாகி வருகிறதாகவும், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு தூங்ககூட முடிவதில்லை, சுகாதாரத் துறை அமைச்சரின் ஊரிலேயே இப்படி ஒரு நிலைமை என்றால் யாரிடம் போய் சொல்வதென்று எங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் நைனா முகமது. இவரது மூன்று வயது மகன் ஆரிப் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இதனால் கோட்டைப்பட்டினம் அரசினர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக ஆரிப் கூட்டி செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாதாரண காய்ச்சல் என்று அனுப்பிவிட்டனர். இருந்தபோதிலும் காய்ச்சல் சரியாகததால் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று ஆரிப் இறந்துவிட்டதை அறிந்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சிறுவனின் தாய், மழைக்காலம் வந்துவிட்டதால் அவர்கள் இருக்கும் குடியிருப்பின் மோசமான சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது என்றார்.

மூன்று வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழப்பு

மேலும் தண்ணீரில் பாசிகள் படர்ந்து அசுத்தமாகி வருகிறதாகவும், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு தூங்ககூட முடிவதில்லை, சுகாதாரத் துறை அமைச்சரின் ஊரிலேயே இப்படி ஒரு நிலைமை என்றால் யாரிடம் போய் சொல்வதென்று எங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்தார்.

Intro:Body:புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே 3 வயது சிறுவன் காய்சலால் உயிரிழப்பு.
சுகாதாரத்துறை அமைச்சர் உள்ள மாவட்டத்திலேயே காய்ச்சலால் சிறுவன் உயிரிழப்பு என பொதுமக்கள் கேள்வி ?

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் நைனாமுகம்மது. இவரது 3 வயது மகன் ஆரிப் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான்.கோட்டைப்பட்டினம் அரசினர் மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சாதாரண காய்ச்சல் என்று அனுப்பிவிட்டனர். இருந்தபோதிலும் காய்ச்சல் சரியாக வராததால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில் நேற்று குழந்தை இறந்துவிட்டதாக தகவலறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அச்சிறுவனின் பெற்றோர்கள் கூறுகையில்,
மழைக்காலம் வந்துவிட்டதால் இப்பகுதியில் மோசமான சாலைகள் இருப்பதால் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது இதில் இருக்கும் தண்ணீரில் பாசிகள் படர்ந்து அசுத்தமாகி வருகிறது இதில் கொசுக்கள் உற்பத்தியாகி இரவு தூங்க கூட முடிவதில்லை இவர்களுக்கு தற்போது காய்ச்சல் இருக்கிறது சுகாதாரத்துறை அமைச்சர் இருக்கும் இந்த ஊரிலேயே இப்படி ஒரு நிலைமை என்றால் யாரிடம் போய் சொல்வதென்று எங்களுக்கு தெரியவில்லை என்று தெரிவித்தனர். சிறுவனின் இறப்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.