ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உணவைப் பாராட்டிய மத்தியக்குழு!

author img

By

Published : May 4, 2020, 6:23 PM IST

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வரையறுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதை மத்தியக்குழு பாராட்டியுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கு உணவு பட்டியலை பாராட்டிய மத்தியகுழு!
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கு உணவு பட்டியலை பாராட்டிய மத்தியகுழு!

புதுக்கோட்டையில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், 'தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதை மத்தியக்குழு பாராட்டியுள்ளது. சிறப்பு கண்காணிப்புக்குழு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு முழு அர்ப்பணிப்போடு கரோனா தடுப்புப் பணிகளை செய்து வருகிறது. சென்னையில் நான்கு அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 55 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த சூழலையும் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பு

அதேபோல், மருத்துவர்களுக்குத் தேவையான முகக் கவசம், பாதுகாப்பு உடைகள் என அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 29 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கிறது. அதேபோல் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...தடைசெய்யப்பட்ட நத்தம் பகுதியில் தடுப்புகள் அகற்றம்!

புதுக்கோட்டையில் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், 'தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவதை மத்தியக்குழு பாராட்டியுள்ளது. சிறப்பு கண்காணிப்புக்குழு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசு முழு அர்ப்பணிப்போடு கரோனா தடுப்புப் பணிகளை செய்து வருகிறது. சென்னையில் நான்கு அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா வார்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் 55 விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. எந்த சூழலையும் எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பு

அதேபோல், மருத்துவர்களுக்குத் தேவையான முகக் கவசம், பாதுகாப்பு உடைகள் என அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 29 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கிறது. அதேபோல் நோய்த்தொற்று பரவாமல் இருப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...தடைசெய்யப்பட்ட நத்தம் பகுதியில் தடுப்புகள் அகற்றம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.