ETV Bharat / state

கூட்டுறவுத்துறை மக்களின் நம்பிக்கையை பெற்று சிறப்பாக இயங்குகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ

author img

By

Published : Nov 18, 2019, 2:59 AM IST

புதுக்கோட்டை: கூட்டுறவுத்துறை 54 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகையுடன் மக்களின் நம்பிக்கை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

minister sellur raju

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான 66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு 2,608 பயனாளிகளுக்கு ரூ.21 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மாணவ மாணவிகளுடன் செல்லூர் ராஜூ
மாணவ மாணவிகளுடன் செல்லூர் ராஜூ

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கூட்டுறவுத்துறை 54 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகையுடன் மக்களின் நம்பிக்கையை பெற்று செயல்பட்டு வருகிறது.

இதன் பயனாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை 87 லட்சத்து 89 ஆயிரத்து 930 விவசாயிகளுக்கு 46 ஆயிரத்து 350 கோடி ரூபாய் வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் விவசாயிகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க உத்தரவிட்டு, இதுவரை ஆறு லட்சத்து 31 ஆயிரத்து 308 விவசாயிகளுக்கு 4 ஆயிரத்து 550 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் 21 ஆயிரத்து 355 விவசாயிகளுக்கு 110 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையில் தமிழ்நாடுதான் பெஸ்ட்

புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பான செயல்பாட்டால் ஆண்டு வருமானவரி கட்டும் வகையில் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

இவரைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், "கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுவதன் மூலம் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுயஉதவிக் குழுக் கடன், பயிர்கடன், மத்திய கால விவசாய கடன், சிறுவணிகக் கடன், டாம்கோ கடன் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பயனாளிகளுக்கு 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தை பருவம் முதலே சிறுசேமிப்பின் அவசியத்தை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்கான 'வானவில்' சிறுசேமிப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய அதிமுக அரசு பல எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறது என்றார்.

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான 66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு 2,608 பயனாளிகளுக்கு ரூ.21 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மாணவ மாணவிகளுடன் செல்லூர் ராஜூ
மாணவ மாணவிகளுடன் செல்லூர் ராஜூ

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், கூட்டுறவுத்துறை 54 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகையுடன் மக்களின் நம்பிக்கையை பெற்று செயல்பட்டு வருகிறது.

இதன் பயனாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை 87 லட்சத்து 89 ஆயிரத்து 930 விவசாயிகளுக்கு 46 ஆயிரத்து 350 கோடி ரூபாய் வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும் விவசாயிகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க உத்தரவிட்டு, இதுவரை ஆறு லட்சத்து 31 ஆயிரத்து 308 விவசாயிகளுக்கு 4 ஆயிரத்து 550 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரையில் 21 ஆயிரத்து 355 விவசாயிகளுக்கு 110 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத்துறையில் தமிழ்நாடுதான் பெஸ்ட்

புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பான செயல்பாட்டால் ஆண்டு வருமானவரி கட்டும் வகையில் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

இவரைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், "கூட்டுறவுத்துறை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுவதன் மூலம் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுயஉதவிக் குழுக் கடன், பயிர்கடன், மத்திய கால விவசாய கடன், சிறுவணிகக் கடன், டாம்கோ கடன் என மொத்தம் 2 ஆயிரத்து 618 பயனாளிகளுக்கு 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தை பருவம் முதலே சிறுசேமிப்பின் அவசியத்தை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் சார்பில் சிறுவர், சிறுமிகளுக்கான 'வானவில்' சிறுசேமிப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய அதிமுக அரசு பல எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறது என்றார்.

Intro:கூட்டுறவுத்துறை ரூ.54,000 கோடி வைப்புத் தொகையுடன் மக்களின் நம்பிக்கை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்களின் மூலமாக தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 87,89,930 விவசாயிகளுக்கு ரூ.46,350 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில்
கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜு பெருமிதம்...Body:
கூட்டுறவுத்துறை ரூ.54,000 கோடி வைப்புத் தொகையுடன் மக்களின் நம்பிக்கை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கூட்டுறவு சங்கங்களின் மூலமாக தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 87,89,930 விவசாயிகளுக்கு ரூ.46,350 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில்
கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜு பெருமிதம்...

புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இன்று கூட்டுறவுத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான 66 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர் கே.ராஜு , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு 2,608 பயனாளிகளுக்கு ரூ.21 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்து முன்னிலையில் நடைபெற்றது.
         இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசியதாவது,
         மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற பலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் காரணத்தால் தற்பொழுது கூட்டுறவுத்துறை ரூ.54,000 கோடி வைப்புத் தொகையுடன் மக்களின் நம்பிக்கை பெற்று செயல்பட்டு வருகிறது. இதன் பயனாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 31.10.2019 வரை 87,89,930 விவசாயிகளுக்கு ரூ.46,350 கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி வட்டியில்லா கடன் வழங்க உத்தரவிட்டு, இதுவரை 6,31,308 விவசாயிகளுக்கு ரூ.4,550 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 21,355 விவசாயிகளுக்கு ரூ.110 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று வழங்குவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 26,14,926 விவசாயிகளுக்கு ரூ.6,120 கோடி காப்பீட்டு தொகையாக பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 1,08,707 விவசாயிகளுக்கு ரூ.274 கோடி காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 15,899 விவசாயிகளுக்க ரூ.1,776 கோடி சிறுதொழில் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சிறப்பான செயல்பாட்டால் ஆண்டு வருமானவரி கட்டும் வகையில் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.
எனவே கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும். இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது.

கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் கடன், அரசின் நலத்திட்டங்கள், வங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படுவதன் மூலமும் குறைந்த வட்டியில் பிற கடன்கள் வழங்கப்படுவதன் மூலம் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தில் கூட்டுறவு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த வகையில் இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்ட அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுயஉதவிக் குழுக் கடன், பயிர்கடன், மத்திய கால விவசாய கடன், சிறுவணிகக் கடன், டாம்கோ கடன் என மொத்தம் 2,618 பயனாளிகளுக்கு ரூ.21 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தை பருவம் முதலே சிறுசேமிப்பின் அவசியத்தை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் சிறுவர், சிறுமியருக்கான ‘வானவில்” சிறுசேமிப்புத் திட்டம் இங்கே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் தங்களது கால்களை இழந்த 2 நபர்களுக்கு அதிநவீன செயற்கை கால்கள் ரூ.2.39 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
அம்மா அவர்களின் அரசு கூட்டுறவின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இதுபோன்ற எண்ணற்ற பல திட்டங்களால் பொதுமக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைய தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.