ETV Bharat / state

சாலையில் வைத்து முத்தலாக் சொன்ன கணவன்; புகாரளித்த புதுக்கோட்டை பெண்! - triple talaq case update

புதுக்கோட்டை: சாலையில் வைத்து முத்தலாக் கூறிய கணவன், குடும்பத் தகராறிற்கு காரணமான கணவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டையில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

A husband said triple talaq on road; Pudukkottai girl filed a compliant
author img

By

Published : Oct 4, 2019, 9:09 PM IST

Updated : Oct 4, 2019, 10:01 PM IST

புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாவிற்கும் ரிஸ்வானா பேகமிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறால் கடந்த பிப்ரவரி மாதம் ரிஸ்வானா வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவர்களிடையே பலமுறை சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியுற்ற நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலுள்ள பைத்துல் மால் ஜமாத்தில் இரு தரப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதில் கோபமடைந்த அப்துல்லா, சாலையில் வைத்து ரிஸ்வானாவிடம் முத்தலாக் கூறிவிட்டு சென்றுள்ளார். மேலும், அப்துல்லா விரைவில் வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதாகவும், குடும்ப தகராறிற்கு காரணமான கணவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிஸ்வானா மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் ஷேக் அப்துல்லா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேர் மீது முத்தலாக் தடைச் சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 'கேரம் ஆட மறுத்த மனைவி: முத்தலாக் கொடுத்த கணவன்...!'

புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாவிற்கும் ரிஸ்வானா பேகமிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறால் கடந்த பிப்ரவரி மாதம் ரிஸ்வானா வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவர்களிடையே பலமுறை சமாதானப் பேச்சு வார்த்தை தோல்வியுற்ற நிலையில், நேற்று முன்தினம் புதுக்கோட்டையிலுள்ள பைத்துல் மால் ஜமாத்தில் இரு தரப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதில் கோபமடைந்த அப்துல்லா, சாலையில் வைத்து ரிஸ்வானாவிடம் முத்தலாக் கூறிவிட்டு சென்றுள்ளார். மேலும், அப்துல்லா விரைவில் வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதாகவும், குடும்ப தகராறிற்கு காரணமான கணவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரிஸ்வானா மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் ஷேக் அப்துல்லா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேர் மீது முத்தலாக் தடைச் சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: 'கேரம் ஆட மறுத்த மனைவி: முத்தலாக் கொடுத்த கணவன்...!'

Intro:Body:புதுக்கோட்டையில் முத்தலாக் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
                  
         புதுக்கோட்டையில் முதன் முதலாக முத்தலாக் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
         புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் முதல் வீதியை சேர்ந்த ஷேக்அப்துல்லா மனைவி ரிஸ்வானா பேகம்(25). இருவருக்கும் கடந்த 30.1.2017 அன்று புதுக்கோட்டையில் உள்ள பிரம்மாண்டமான க்ரீன் பேலஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது 70 பவுன் தங்க நகை, ரூ 1 லட்சம் பணம் சீர்வரிசைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சஹர்லினா (எ) சஹ்ரா பானு என்ற 2 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில் இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு கடந்த 1.2.2019 அன்று வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். மேலும் பலமுறை உறவினர்கள் மூலம் சமாதானப் பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 2.10.2019 அன்று புதுக்கோட்டை பைத்துல் மால் ஜமாத்தில் இரு தரப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிட்டவில்லை. அப்போது வெளியில் வந்த கணவர் சாலையில் வைத்து முத்தலாக் சொல்லிவிட்டு சென்றுவிட்டார் என்றும் விரைவில் வெளிநாடு தப்பிச் செல்ல உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு உடந்தையாக இருந்த மாமனார் மாமியார் நாத்தனார், மூத்த மருமகள் உள்பட 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் ஷேக்அப்துல்லா உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் 6 பேர் மீது முத்தலாக் தடைச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் சட்டத்தின் முதல் வழக்கு புதுக்கோட்டையில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
                                                      

Conclusion:
Last Updated : Oct 4, 2019, 10:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.