ETV Bharat / state

மகளிர் தின ஸ்பெஷல்: மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்! எதுக்கு தெரியுமா?

author img

By

Published : Mar 9, 2023, 5:35 PM IST

சூடாக இல்லாத தேநீரை வழங்கியதற்கு திட்டியதாக கூறி மாமியாரை, மருமகள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

மலைக்குடிபட்டி: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியைச் சேர்ந்தவர் வேலு. மனைவி பழனியம்மாள் மற்றும் மகன் சுப்பிரமணீ ஆகியோருடன் வசித்து வருகிறார். சுப்பிரமணிக்கு, கணகு என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

சுப்பிரமணி விராலிமலை பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இதில் கணகு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. கணகு தினம்தோறும் மருந்துகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் மருந்துகள் எடுக்க தவறினால் பல மடங்கு வீரியம் இருக்க கூடும் என மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இரண்டு தினங்களாக கணகு மருந்துகள் எடுக்க தவறியதாக கூறப்படுகிறது. மாமியார் தினந்தோறும் மருமகளிடம் தேநீர் வாங்கி வரச் சொல்லி அனுப்பி விடுவாராம்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பழனியம்மாள் தனது மருமகள் கணகுவிடம் தேநீர் கேட்டுள்ளார். தேனீர் கொடுக்கும் போது ஏன் சூடாக இல்லை எனக் கேட்டு மருமகளை மாமியார் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மருமகள் கணகு, அருகில் கிடந்த சைக்கிள் பழுது பார்க்கும் இரும்பு கம்பியை எடுத்து பழனியம்மாள் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பழனியமாளை உறவினர்கள் அனுமதித்து உள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக உயிர் இழந்தார்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து மருத்துமனைக்கு விரைந்த இலுப்பூர் போலீசார், பழனியம்மாளின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து மருமகள் கணகுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேநீர் சூடாக இல்லாததால் காரணாத்திற்காக மாமியார் திட்டியதில் மருமகள் அடித்துக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மகளிர் தினத்தன்று, தேநீர் சுடாக தராத காரணத்திற்கு திட்டியதாக மாமியாரை மருமகள் அடித்துக் கொன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: "அதிமுகவை அழிக்க கைக்கூலியாக இருக்கிறார் ஈபிஎஸ்" - நாஞ்சில் கோலப்பன் குற்றச்சாட்டு!

மலைக்குடிபட்டி: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியைச் சேர்ந்தவர் வேலு. மனைவி பழனியம்மாள் மற்றும் மகன் சுப்பிரமணீ ஆகியோருடன் வசித்து வருகிறார். சுப்பிரமணிக்கு, கணகு என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

சுப்பிரமணி விராலிமலை பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இதில் கணகு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. கணகு தினம்தோறும் மருந்துகளை கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

ஒரு நாள் மருந்துகள் எடுக்க தவறினால் பல மடங்கு வீரியம் இருக்க கூடும் என மருத்துவர்கள் தரப்பில் எச்சரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இரண்டு தினங்களாக கணகு மருந்துகள் எடுக்க தவறியதாக கூறப்படுகிறது. மாமியார் தினந்தோறும் மருமகளிடம் தேநீர் வாங்கி வரச் சொல்லி அனுப்பி விடுவாராம்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பழனியம்மாள் தனது மருமகள் கணகுவிடம் தேநீர் கேட்டுள்ளார். தேனீர் கொடுக்கும் போது ஏன் சூடாக இல்லை எனக் கேட்டு மருமகளை மாமியார் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மருமகள் கணகு, அருகில் கிடந்த சைக்கிள் பழுது பார்க்கும் இரும்பு கம்பியை எடுத்து பழனியம்மாள் தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பழனியமாளை உறவினர்கள் அனுமதித்து உள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் பரிதாபமாக உயிர் இழந்தார்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து மருத்துமனைக்கு விரைந்த இலுப்பூர் போலீசார், பழனியம்மாளின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து மருமகள் கணகுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேநீர் சூடாக இல்லாததால் காரணாத்திற்காக மாமியார் திட்டியதில் மருமகள் அடித்துக் கொன்றதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மகளிர் தினத்தன்று, தேநீர் சுடாக தராத காரணத்திற்கு திட்டியதாக மாமியாரை மருமகள் அடித்துக் கொன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: "அதிமுகவை அழிக்க கைக்கூலியாக இருக்கிறார் ஈபிஎஸ்" - நாஞ்சில் கோலப்பன் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.