பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரம்பலூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் முதியவர் ஒருவரின் சடலம் மிதப்பதாக பெரம்பலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்தவர் யார், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.