ETV Bharat / state

மாநில அளவிலான தடகள போட்டி; பெரம்பலூர் மாணவிகள் சாதனை!

author img

By

Published : Sep 3, 2019, 2:04 PM IST

பெரம்பலூர்: மாநில அளவிலான தடகள போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள் தென்னிந்திய அளவிலான தடகளப்போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

state level athlete

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு மாநில தட கள சங்கம் சார்பில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள், பவானி 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீ தடை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், சுபாஷினி என்ற மாணவி 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3 கிலோ மீட்டர் நடைபயிற்சி போட்டியில் தங்கமும், கிருத்திகா என்ற மணவி 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 1500 மீ ஓட்டபந்தயத்தில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதேபோல் ஈட்டி எறிதல், மும்முறைத் தாண்டுதல், ஹெப்டத்லான், உள்ளிட்ட போட்டிகள் என மொத்தம் 2 தங்கம் , 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா , உடற்கல்வி ஆசிரியை கோகிலா ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

மாநில அளவில் வெற்றி பெற்ற பெரம்பலூர் மாணவிகள்
மாநில அளவில் வெற்றி பெற்ற பெரம்பலூர் மாணவிகள்

மாநில அளவில் வெற்றி பெற்ற பவானி, கிருத்திகா, பிரியதர்ஷனி, சுபாஷினி, தன்யா ஆகிய 5 மாணவிகள் வருகிற செப்டம்பர் 14, 15ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு மாநில தட கள சங்கம் சார்பில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவிகள், பவானி 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீ தடை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும், சுபாஷினி என்ற மாணவி 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3 கிலோ மீட்டர் நடைபயிற்சி போட்டியில் தங்கமும், கிருத்திகா என்ற மணவி 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 1500 மீ ஓட்டபந்தயத்தில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதேபோல் ஈட்டி எறிதல், மும்முறைத் தாண்டுதல், ஹெப்டத்லான், உள்ளிட்ட போட்டிகள் என மொத்தம் 2 தங்கம் , 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா , உடற்கல்வி ஆசிரியை கோகிலா ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.

மாநில அளவில் வெற்றி பெற்ற பெரம்பலூர் மாணவிகள்
மாநில அளவில் வெற்றி பெற்ற பெரம்பலூர் மாணவிகள்

மாநில அளவில் வெற்றி பெற்ற பவானி, கிருத்திகா, பிரியதர்ஷனி, சுபாஷினி, தன்யா ஆகிய 5 மாணவிகள் வருகிற செப்டம்பர் 14, 15ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

Intro:தென்னிந்திய அளவிலான தடகள போட்டிக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் தகுதி .2 தங்கம் 3 வெள்ளி 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று சாதனை.Body:சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் கடந்த 30 ,31, 1ம் தேதிகளில் தமிழ்நாடு மாநில தட கள சங்கம் சார்பில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட பெண்கள் விளையாட்டு விடுதி மாணவிகள் பங்கு பெற்றனர்.
இதில் 20 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 400 மீ தடை தாண்டுதல் போட்டியில் பவானி தங்கப் பதக்கமும், 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 3 கிலோ மீட்டர் நடைபயிற்சி போட்டியில் சுபாஷினிமுதல் பரிசு தங்கமும், 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கிருத்திகா என்ற மாணவி 1500 மீ ஒட்டப்பந்தயத்தில் வெள்ளி Uதக்கமும், இதேபோல் ஈட்டி எறிதல், மும்முறை தாண்டுதல், ஹெப்டத்லான், உள்ளிட்ட போட்டிகளில் என ஆக மொத்தம் 2 தங்கம் , 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இதில் பவானி, கிருத்திகா, பிரியதர்ஷனி, சுபாஷினி, தன்யா ஆகிய 5 மாணவிகள் வருகிற செப்: 14-15ஆகிய தேதிகளில் தென்னிந்திய அளவிலான கர்நாடகா . மாநிலத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான நடைபெறும் தடகள போட்டியில் கலந்து கொள்கின்றனர் Conclusion:மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா , தடகள பயிற்றுநர் கோகிலா ஆகியோர் பாராட்டினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.