பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள துறையூர் சாலையில் சென்னை ஊரப்பாக்கம் பகுதியிலிருந்து சுமார் ஐந்து குடும்பங்கள் பிரம்பு மற்றும் மூங்கில் உள்ளிட்டவைகளை கொண்டு பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்
சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் தங்களது வியாபாரத்தை தொடங்கிய வியாபாரிகள் நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக ஆக்கிரமிப்பு நடைபெற்றதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், அவர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்கேயே குடிசையமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முக்கியமான இடங்களுக்கு சென்று இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை தங்கியிருந்து தங்களது வியாபாரத்தை செய்து வருகின்றனர். இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
![மூங்கிலால் செய்யப்பட்ட பொருள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-02-bamboo-things-sales-script-vis-7205953_27112019151933_2711f_1574848173_564.jpg)
அங்கு மூங்கில் மற்றும் பிரம்பால் செய்யப்பட்ட நாற்காலிகள், கூடை வகைகள், குழந்தை தொட்டில் , குழந்தை நாற்காலி மற்றும் கோயிலுக்கு செல்வதற்காக எடுத்துக் கொண்டு செல்லக்கூடிய பூஜை கூடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேர்த்தியாகவும் அழகாகவும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
200 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்த நிலையில் தற்பொழுது வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. நாடோடியாக ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் அவர்கள் வியாபாரம் சரியாக இருந்தால் மட்டுமே தங்களுடைய வாழ்வாதாரம் சிறக்கும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி - காவல் ஆணையரிடம் புகார்