ETV Bharat / state

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு - காவல்துறை விசாரணை!

author img

By

Published : Jun 27, 2020, 12:55 AM IST

பெரம்பலூர்: வெப்பந்தட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி உயிரிழந்த்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Schoolgirl dies after falling into well - Police investigation
Schoolgirl dies after falling into well - Police investigation

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி என்பவருடைய மகள் சுமத்திரா.இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இதனிடையே அதே ஊரைச் சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவி உடலை மீட்டனர்.

அதன்பின் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரும்பாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி என்பவருடைய மகள் சுமத்திரா.இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இதனிடையே அதே ஊரைச் சேர்ந்த தங்கவேல் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவி உடலை மீட்டனர்.

அதன்பின் மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரும்பாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.