ETV Bharat / state

மிருகங்களுக்குப் போடப்பட்ட மின்வேலியில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி மரணம்!

author img

By

Published : Sep 3, 2020, 10:24 PM IST

பெரம்பலூர்: வயலில் எலி, பன்றிகளுக்குப் போடப்பட்டிருந்த கம்பிவேலியில் இருந்த மின்சாரம் தாக்கி கணவன், மனைவி இருவர் உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

deathdeath
death

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களின் வயலில் விதைக்கப்பட்டிருந்த சோளத்தை எலி, பன்றிகள் சேதம் செய்வதால் அதைத் தடுக்க வயலைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர்.

இதனிடையே அந்த மின்வேலியை மின் இணைப்பைத் துண்டிக்காமல் பெரியசாமி அப்புறப்படுத்தியுள்ளார். இந்நிலையில் திடீரென மின்சாரம் வந்ததால் மின்சாரம் பாய்ந்து துடித்து சுருண்டு விழுந்துள்ளார். இதனைக் கண்டு அவரது மனைவி மலர்க்கொடி பதற்றத்தில் மின் இணைப்பைத் துண்டிக்க கம்பியை கையில் பிடித்து இழுத்ததில் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த அரும்பாவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்வேலியில் கணவன், மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: காவலாளியின் தலையில் காரை ஏற்றிய தொழிலதிபரின் மகள் கைது!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களின் வயலில் விதைக்கப்பட்டிருந்த சோளத்தை எலி, பன்றிகள் சேதம் செய்வதால் அதைத் தடுக்க வயலைச் சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர்.

இதனிடையே அந்த மின்வேலியை மின் இணைப்பைத் துண்டிக்காமல் பெரியசாமி அப்புறப்படுத்தியுள்ளார். இந்நிலையில் திடீரென மின்சாரம் வந்ததால் மின்சாரம் பாய்ந்து துடித்து சுருண்டு விழுந்துள்ளார். இதனைக் கண்டு அவரது மனைவி மலர்க்கொடி பதற்றத்தில் மின் இணைப்பைத் துண்டிக்க கம்பியை கையில் பிடித்து இழுத்ததில் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த அரும்பாவூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்வேலியில் கணவன், மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: காவலாளியின் தலையில் காரை ஏற்றிய தொழிலதிபரின் மகள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.