ETV Bharat / state

ஒரு தலைக்காதல்: சிறுமியின் தந்தை மீது நாட்டு வெடிகுண்டு வீச முயற்சி

author img

By

Published : Apr 21, 2022, 6:53 AM IST

பெரம்பலூரில் ஒரு தலைக்காதலை கண்டித்த சிறுமியின் தந்தை மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இளைஞர் முயற்சி
இளைஞர் முயற்சி

பெரம்பலூர்: கவுள்பாளையம், கலை நகரில் வசிப்பவர் ராஜ் மகன் தனபால் (24). இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை செய்து வருகிறார். கவுள்பாளையம் குடிசை மாற்று வாரியக்குடியிருப்பை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை தனபால் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனபால் அந்த சிறுமியை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை, தனபாலின் பெரியப்பாவான செல்வம் என்பவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனபாலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தனபால், நேற்று முன்தினம் (ஏப்.19) இரவு சிறுமியின் வீடு இருக்கும் தெருவில் குறுக்கும் நெடுக்குமாக போய் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் தனபாலை திட்டி அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் தந்தையும், அவரது பெரியப்பாவும் சேர்ந்து, தனபால் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

திடீரென தனபால், சிறுமியின் தந்தை மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது தனபால் அருகே நின்று கொண்டிருந்த அவரது தம்பி நந்தகுமார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இது குறித்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர காவல் துறையினர், தனபாலை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 23 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தனபாலுக்கு நாட்டு வெடிகுண்டு கொடுத்தது யார், எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் விடுதியில் தனிமையில் இருந்த காதல் ஜோடி - திடீரென காதலன் தற்கொலை

பெரம்பலூர்: கவுள்பாளையம், கலை நகரில் வசிப்பவர் ராஜ் மகன் தனபால் (24). இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் வேலை செய்து வருகிறார். கவுள்பாளையம் குடிசை மாற்று வாரியக்குடியிருப்பை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை தனபால் ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனபால் அந்த சிறுமியை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை, தனபாலின் பெரியப்பாவான செல்வம் என்பவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனபாலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தனபால், நேற்று முன்தினம் (ஏப்.19) இரவு சிறுமியின் வீடு இருக்கும் தெருவில் குறுக்கும் நெடுக்குமாக போய் வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் தனபாலை திட்டி அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் தந்தையும், அவரது பெரியப்பாவும் சேர்ந்து, தனபால் வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

திடீரென தனபால், சிறுமியின் தந்தை மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது தனபால் அருகே நின்று கொண்டிருந்த அவரது தம்பி நந்தகுமார் அதனை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இது குறித்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர காவல் துறையினர், தனபாலை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 23 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தனபாலுக்கு நாட்டு வெடிகுண்டு கொடுத்தது யார், எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியார் விடுதியில் தனிமையில் இருந்த காதல் ஜோடி - திடீரென காதலன் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.