ETV Bharat / state

தனியார் வங்கியில் ரூ. 16லட்சம் கொள்ளை: ஒருவர் கைது

author img

By

Published : Aug 24, 2019, 5:25 PM IST

பெரம்பலூர்: திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஸ்டீபன்

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு திருச்சி தனியார் வங்கியில் இருந்து ஏடிஎம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போதை ஆசாமி ஒருவர், அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் அந்த நபரை துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
அங்கு அறை இல்லாததால், வேறு லாட்ஜூக்கு அவரை அழைத்துச் சென்றபோது, அந்த நபர் போதையில் ’தம்மிடம் நிறைய பணம் இருப்பதாகவும் அறை எடுத்துக் கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஒட்டுநர், உடனே அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தார்.

அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் போதை ஆசாமி கொண்டு வந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் ரூ. 12லட்சத்து 97 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருச்சியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பதும், கடந்த 20ஆம் தேதி ஏடிஎம் மையத்திற்கு கொண்டு சென்ற பணத்தை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

ஸ்டீபன் சென்ற ஆட்டோ

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு திருச்சி தனியார் வங்கியில் இருந்து ஏடிஎம் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத நபர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போதை ஆசாமி ஒருவர், அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் அந்த நபரை துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
அங்கு அறை இல்லாததால், வேறு லாட்ஜூக்கு அவரை அழைத்துச் சென்றபோது, அந்த நபர் போதையில் ’தம்மிடம் நிறைய பணம் இருப்பதாகவும் அறை எடுத்துக் கொடுத்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஒட்டுநர், உடனே அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தார்.

அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் போதை ஆசாமி கொண்டு வந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் ரூ. 12லட்சத்து 97 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருச்சியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பதும், கடந்த 20ஆம் தேதி ஏடிஎம் மையத்திற்கு கொண்டு சென்ற பணத்தை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

ஸ்டீபன் சென்ற ஆட்டோ
Intro:பெரம்பலூரில் நேற்று ஆட்டோ வில் வந்த போதை நபரிடம் கைப்பற்ற பணம் திருச்சி ஏடிஎம் கொள்ளையடிக்கப்பட்டதா சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணைBody:பெரம்பலூரில் நேற்று திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் போதையில் வந்து பெரம் Uலூர் சேர்ந்த முருகையா என்பவரது ஆட்டோவில் TN 46 A 1243 என்ற BB ஹோட்டலுக்கு சென்று உள்ளார் .இதனிடையே அந்த ஹோட்டலில் ரூம் இல்லாததால் மற்றொரு ஹோட்டலுக்கு செல்லும் போது அவர் கொண்டு வந்த பெட்டியில் கட்டு கட்டாக ரூ 12 லட்சத்து 97 ஆயிரத்து ரூ 200 பணம் இருப்பதை கண்டு ஆட்டோ ஒட்டுநர் முருகையா சந்தேகத்தின் பேரில் பெரம் Uலூர் போலீசார் தகவல் கொடுக்கப்பட்டு பணத்தை பெரம் Uலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்சி சிட்டி யூனியன் வங்கியில் உள்ள ஏடிம் இல் பணம் நிரப்பு வதற்காக கொண்டு செல்லப் பட்ட பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனிடையே நேற்று கைப்பற்ற பட்ட பணம் திருச்சி ஏடிஎம் கொள்ளையடிக்கப்பட்டதா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்Conclusion:கைது செய்யப்பட்ட குற்றவாளி திருச்சி கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிரது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.