ETV Bharat / state

ரவுடி வீரமணி கொலை வழக்கு: டால்டா கண்ணன் உள்பட நால்வர் கைது

author img

By

Published : Jun 9, 2020, 10:29 PM IST

பெரம்பலூர்: ரவுடி வீரமணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், டால்டா கண்ணன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rowdy murder case
Rowdy murder case

பெரம்பலூர் நகர்ப்புற பகுதி திருநகரைச் சேர்ந்த வீரமணி (27) என்பவர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடைய, கடந்த ஜூன் 7ஆம் தேதி இரவு வீரமணி அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பெரம்பலூர் காவல் ஆய்வாளர் சுப்பையா தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், வீரமணி கொலை தொடர்பாக டால்டா கண்ணன், பார்த்தா (எ) பார்த்திபன், அய்யனார், ஆனந்த் (எ) முருகானந்தம் ஆகிய நான்கு பேரைப் பிடித்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் நகர்ப்புற பகுதி திருநகரைச் சேர்ந்த வீரமணி (27) என்பவர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதனிடைய, கடந்த ஜூன் 7ஆம் தேதி இரவு வீரமணி அவரது வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பெரம்பலூர் காவல் ஆய்வாளர் சுப்பையா தலைமையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், வீரமணி கொலை தொடர்பாக டால்டா கண்ணன், பார்த்தா (எ) பார்த்திபன், அய்யனார், ஆனந்த் (எ) முருகானந்தம் ஆகிய நான்கு பேரைப் பிடித்து காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.