ETV Bharat / state

சர்க்கரை ஆலை பேரவை கூட்டத்தைக் காணொலியில் நடத்த எதிர்ப்பு!

author img

By

Published : Dec 10, 2020, 8:05 PM IST

பெரம்பலூர்: சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் பேரவைக் கூட்டத்தைக் காணொலி மூலமாக நடத்துவதற்கு அனைத்து விவசாய சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சர்க்கரை ஆலை
சர்க்கரை ஆலை

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 43ஆவது பங்குதாரர்கள் கூட்டம் டிசம்பர் 29ஆம் தேதி மாலை 4 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என சர்க்கரை ஆலையின் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளிடம் நேரடியாக குறைகளைக் கேட்காமல், காணொலி மூலம் பங்குதாரர்கள் கூட்டம் நடைபெறுவதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனைக் கண்டித்து எறையூர் சர்க்கரை ஆலை முன்பு டிசம்பர் 29ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகள் ரத்து!

பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 43ஆவது பங்குதாரர்கள் கூட்டம் டிசம்பர் 29ஆம் தேதி மாலை 4 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என சர்க்கரை ஆலையின் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளிடம் நேரடியாக குறைகளைக் கேட்காமல், காணொலி மூலம் பங்குதாரர்கள் கூட்டம் நடைபெறுவதாக வெளியிட்ட அறிவிப்பிற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனைக் கண்டித்து எறையூர் சர்க்கரை ஆலை முன்பு டிசம்பர் 29ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகள் ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.