ETV Bharat / state

குப்பை கொட்ட வந்த பெண்ணிடம் எட்டரை பவுன் செயின் பறிப்பு: காவல் துறை விசாரணை - காவல்துறை விசாரணை

பெரம்பலூர்: குப்பை கொட்ட வந்த பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர்கள் எட்டரை பவுன் செயினை பறித்து சென்றது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

kalathur
kalathur
author img

By

Published : Dec 10, 2020, 2:55 PM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவருடைய மனைவி மைதிலி. இவர் இன்று (டிச.10) காலை தனது வீட்டிலிருந்து குப்பை கொட்டுவதற்காக சாலை பகுதிக்கு வந்தார்.

அவர் வருவதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மைதிலி கழுத்தில் கிடந்த எட்டரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். இருப்பினும் கொள்ளையர்கள் தப்பி சென்றனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கை.களத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவருடைய மனைவி மைதிலி. இவர் இன்று (டிச.10) காலை தனது வீட்டிலிருந்து குப்பை கொட்டுவதற்காக சாலை பகுதிக்கு வந்தார்.

அவர் வருவதை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மைதிலி கழுத்தில் கிடந்த எட்டரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். இருப்பினும் கொள்ளையர்கள் தப்பி சென்றனர். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கை.களத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சத்தியமங்கலம் மாட்டுத் தீவன சோளத்தட்டு அறுவடை தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.