ETV Bharat / state

பூசாரிக்கு கரோனா: மதுரகாளியம்மன் கோயில் மூடல்

பெரம்பலூர்: பிரசித்திப் பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பூசாரிக்கு கரோனா தொற்று உறுதியானதால் அக்கோயில் மூடப்பட்டது.

author img

By

Published : Sep 5, 2020, 4:53 PM IST

madurakaliyamman
madurakaliyamman

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகும். இங்கு திங்கள், வெள்ளி மற்றும் அமாவாசை தினங்களில் மட்டுமே சிறப்பு பூஜை நடத்தப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மூடி கிடந்த கோயில்கள், தமிழ்நாடு முழுவதும் அரசு விதிமுறைப்படி கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டன.

அந்த வகையில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திறக்கப்படவிருந்த நிலையில், அக்கோயில் பூசாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி கோயில் மூடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கோயில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வழக்கம்போல் நாளை (செப்டம்பர் 6) கோயில் திறக்கப்படும் என செயல் அலுவலர் அருண்பாண்டியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென்னிந்தியாவை புறக்கணிக்கும் மத்திய அரசு: டி.ஆர் கடும் கண்டனம்

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகும். இங்கு திங்கள், வெள்ளி மற்றும் அமாவாசை தினங்களில் மட்டுமே சிறப்பு பூஜை நடத்தப்படும். கரோனா பரவல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக மூடி கிடந்த கோயில்கள், தமிழ்நாடு முழுவதும் அரசு விதிமுறைப்படி கடந்த 1ஆம் தேதி திறக்கப்பட்டன.

அந்த வகையில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திறக்கப்படவிருந்த நிலையில், அக்கோயில் பூசாரி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி கோயில் மூடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கோயில் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வழக்கம்போல் நாளை (செப்டம்பர் 6) கோயில் திறக்கப்படும் என செயல் அலுவலர் அருண்பாண்டியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென்னிந்தியாவை புறக்கணிக்கும் மத்திய அரசு: டி.ஆர் கடும் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.