ETV Bharat / state

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - nammakkal tourist place

நாமக்கல்: கொல்லிமலையில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயனிகள்
author img

By

Published : Aug 27, 2019, 6:00 PM IST

Updated : Aug 27, 2019, 11:50 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை ரப்பளீஸ்வரர் கோயில், பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, மாசிலா அருவியானது அனைவரையும் கவரும் இடமாக அமைந்துள்ளது.

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயனிகள்

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் பல மாதங்களாக வறண்டு கிடந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி உள்ளிட்ட அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். தொடர் விடுமுறை என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு மாசிலா அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக கொல்லிமலை ரப்பளீஸ்வரர் கோயில், பெரியசாமி கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக, மாசிலா அருவியானது அனைவரையும் கவரும் இடமாக அமைந்துள்ளது.

கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயனிகள்

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழையால் பல மாதங்களாக வறண்டு கிடந்த ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி உள்ளிட்ட அருவிகளில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது. நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர். தொடர் விடுமுறை என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு மாசிலா அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

Intro:தொடர் விடுமுறையை ஒட்டி கொல்லிமலை மாசிலா அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள், தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் ஆனந்த குளியல் போடும் பொதுமக்கள்



Body:நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தலமாக் கொல்லிமலை விளங்கி வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 1400 மீட்டர் உயரத்தில் உள்ள கொல்லி மலை நாமக்கல்லில் இருந்து 55 கி,மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு அரப்பளீஸ்வரர் கோவில், பெரியசாமி கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்கள் முக்கிய சுற்றுலா மை wasயங்களாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக மாசிலா அருவியானது சிறியவர் முதல் பெரியவர் வரை கவரும் இடமாக அமைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தரை மட்டத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு அனைவரும் மிக குறைந்த தூரம் நடந்து சென்றாலே அருவியில் கொட்டும் மூலிகை தண்ணீரில் குளிக்க முடியும் என்பதால் சுற்றுலா பயணிகளின் முதல் தேர்வாக மாசிலா அருவி அமைகிறது. கடந்த சில நாட்களாக கொல்லிமலை சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்ததால் மாசிலா அருவிக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. தொடர் விடுமுறை என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் நாமக்கல், சேலம், கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு மாசிலா அருவிக்கு வந்து செல்கின்றனர்.




Conclusion:
Last Updated : Aug 27, 2019, 11:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.