ETV Bharat / state

'கால்நடைகளுக்கான மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துங்கள்'

author img

By

Published : Jan 30, 2020, 10:21 AM IST

நாமக்கல்: நோய் தடுப்பு மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகள் நலமுடன் வளர்வதை உறுதிசெய்ய முடியுமென பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனத்தின் மேலாளர் பிர் சிங் நேகி அறிவுறுத்தியுள்ளார்.

use medicines for livestock in a natural way nmk
கால்நடைக்களுக்கான மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துங்கள் !

நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இயற்கை முறையில் கால்நடைகள் வளர்ப்பு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மோகன் கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.

கால்நடைகளுக்கான மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துங்கள்

சிறப்புரையாற்றிய பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனத்தின் மேலாளர் பிர் சிங் நேகி பேசுகையில், “கால்நடை வளர்ப்பில் தீவனப் பொருள்கள், மருந்து பொருள்கள், இனப்பெருக்கம் உள்ளிட்டவைகளில் ரசாயனம் கலந்த பொருள்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு இயற்கை முறையில் கிடைக்கும் தீவனப் பொருள்கள், புண்ணாக்கு மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகள் ஆரோக்கியமாக வளர்வதோடு, பால் உற்பத்தி திறனும் அதிகரிப்பதோடு, தரமான இறைச்சியும் கிடைக்கும் என்றும் எனப் பேசினர். எனவே விவசாயிகள் இயற்கை முறையில் கால்நடைகளை வளர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

use medicines for livestock in a natural way
கால்நடைக்களுக்கான மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துங்கள்


இக்கருத்தரங்கில் கால்நடை வளர்ப்பு பயிற்சி மைய இயக்குநர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : எழும்பூர்-சேலம் விரைவு ரயிலை கரூா் வரை நீட்டிப்பது தொடர்பாக பரிசீலனை

நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இயற்கை முறையில் கால்நடைகள் வளர்ப்பு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மோகன் கருத்தரங்கை தொடங்கிவைத்தார்.

கால்நடைகளுக்கான மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துங்கள்

சிறப்புரையாற்றிய பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவுப்பொருள்கள் ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனத்தின் மேலாளர் பிர் சிங் நேகி பேசுகையில், “கால்நடை வளர்ப்பில் தீவனப் பொருள்கள், மருந்து பொருள்கள், இனப்பெருக்கம் உள்ளிட்டவைகளில் ரசாயனம் கலந்த பொருள்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு இயற்கை முறையில் கிடைக்கும் தீவனப் பொருள்கள், புண்ணாக்கு மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகள் ஆரோக்கியமாக வளர்வதோடு, பால் உற்பத்தி திறனும் அதிகரிப்பதோடு, தரமான இறைச்சியும் கிடைக்கும் என்றும் எனப் பேசினர். எனவே விவசாயிகள் இயற்கை முறையில் கால்நடைகளை வளர்க்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

use medicines for livestock in a natural way
கால்நடைக்களுக்கான மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துங்கள்


இக்கருத்தரங்கில் கால்நடை வளர்ப்பு பயிற்சி மைய இயக்குநர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க : எழும்பூர்-சேலம் விரைவு ரயிலை கரூா் வரை நீட்டிப்பது தொடர்பாக பரிசீலனை

Intro:இயற்கை முறையில் கால்நடைகளை வளர்த்தால் தரமான இறைச்சிகளையும், கூடுதலாக பால் உற்பத்தியையும் பெற முடியும் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்.Body:நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இயற்கை முறையில் கால்நடை வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மோகன் கருத்தரங்கை துவக்கி வைக்க , பதப்படுத்தப்பட்ட வேளாண் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனத்தின் மேலாளர் பிர் சிங் நேகி கலந்து கொண்டு சிறப்பு ஆற்றினார். அப்போது பேசிய அவர்கள் விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் தீவன பொருட்கள், மருந்து பொருட்கள், இனப்பெருக்கம் உள்ளிட்டவைகளில் இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை கைவிட்டு இயற்கை முறையில் கிடைக்கும் தீவன பொருட்கள், புண்ணாக்கு மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகள் ஆரோக்கியமாக வளர்வதோடு, பால் உற்பத்தி திறனும் அதிகரிப்பதோடு, தரமான இறைச்சியும் கிடைக்கும் என்றும் என பேசினர். எனவே விவசாயிகள் இயற்கை முறையில் கால்நடைகளை வளர்க்க வேண்டும் என கேட்டு கொண்டனர். கருத்தரங்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.