ETV Bharat / state

நாட்டுத் துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு - இருவர் கைது!

author img

By

Published : May 28, 2020, 2:50 PM IST

நாமக்கல்: முயல் வேட்டைக்கு சென்ற போது நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். அவருடன் சென்ற 17 வயது சிறுவன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல்லில் நாட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு  நாட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு இருவர் கைது  நாட்டுத்துப்பாக்கி  நாட்டுத்தூப்பாக்கி உயிரிழப்பு  முயல் வேட்டை  Gunshoot Death in Namakkal  Two Arrested For Gunshoot Death case In Namakkal  Gunshoot Death  Rabbit Hunt  Rasipuram Gunshoot
Gunshoot Death

நாமக்கல் மாவட்டம், குமாரபாளைம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (24). ஊத்துக்குளிகாடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40). மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம் (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் மூவரும் தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியுடன் நேற்று (மே 27) இரவு ராசிபுரம் அருகேயுள்ள சிங்கிலியன்கோம்பை மலைப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் முயல் வேட்டைக்காக சென்றுள்ளனர்.

அப்போது, நாட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. இதில், சக்திவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், ராம் இருவரும் சக்திவேலின் உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றி அவரது வீட்டின் அருகே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

நாமக்கல்லில் நாட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு  நாட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு இருவர் கைது  நாட்டுத்துப்பாக்கி  நாட்டுத்தூப்பாக்கி உயிரிழப்பு  முயல் வேட்டை  Gunshoot Death in Namakkal  Two Arrested For Gunshoot Death case In Namakkal  Gunshoot Death  Rabbit Hunt  Rasipuram Gunshoot
கைது செய்யப்பட்ட செந்தில் குமாருடன் நாட்டுத் தூப்பாக்கி

இது குறித்து தகவலறிந்து வந்த மங்களபுரம் காவல்துறையினர், சக்திவேலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து, நாட்டுத் துப்பாக்கியை காவல் துறையினர் பறிமுதல் செய்து தப்பியோடிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:என்கவுன்ட்டர் வீடியோ வெளியிட்ட சட்டீஸ்கர் நக்சலைட்டுகள்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளைம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (24). ஊத்துக்குளிகாடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (40). மங்களபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம் (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் மூவரும் தடை செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கியுடன் நேற்று (மே 27) இரவு ராசிபுரம் அருகேயுள்ள சிங்கிலியன்கோம்பை மலைப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் முயல் வேட்டைக்காக சென்றுள்ளனர்.

அப்போது, நாட்டுத் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. இதில், சக்திவேல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செந்தில்குமார், ராம் இருவரும் சக்திவேலின் உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றி அவரது வீட்டின் அருகே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

நாமக்கல்லில் நாட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு  நாட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் உயிரிழப்பு இருவர் கைது  நாட்டுத்துப்பாக்கி  நாட்டுத்தூப்பாக்கி உயிரிழப்பு  முயல் வேட்டை  Gunshoot Death in Namakkal  Two Arrested For Gunshoot Death case In Namakkal  Gunshoot Death  Rabbit Hunt  Rasipuram Gunshoot
கைது செய்யப்பட்ட செந்தில் குமாருடன் நாட்டுத் தூப்பாக்கி

இது குறித்து தகவலறிந்து வந்த மங்களபுரம் காவல்துறையினர், சக்திவேலின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து, நாட்டுத் துப்பாக்கியை காவல் துறையினர் பறிமுதல் செய்து தப்பியோடிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:என்கவுன்ட்டர் வீடியோ வெளியிட்ட சட்டீஸ்கர் நக்சலைட்டுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.