ETV Bharat / state

குழந்தைகள் விற்பனை வழக்கு: ஏழு பேருக்கு காவல் நீட்டிப்பு

author img

By

Published : Aug 1, 2019, 3:23 PM IST

Updated : Aug 1, 2019, 3:37 PM IST

நாமக்கல்: பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் தொடர்புடைய ஏழுபேருக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஏப்ரல் 25ஆம் தேதி வெளியான ஆடியோ விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி, அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் ரவிச்சந்திரனையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்களான பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் சேலம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் சாந்தி, பெங்களூருவைச் சேர்ந்த ரேகா, கார் ஓட்டுநர் நந்தகுமார், கொல்லிமலையைச் சேர்ந்த பாதிரியார் கந்தசாமி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு
இந்நிலையில் கைதானவர்களில் ஓய்வுப்பெற்ற செவிலியர் அமுதவல்லி உட்பட 4 பேர் ஜாமீன் பெற்ற நிலையில், மீதமுள்ள இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா,அருள்சாமி,செல்வி, சாந்தி, ரேகா, நந்தகுமார் ஆகியோரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததால், காவல்துறையினர் ஏழு பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதையடுத்து விசாரணை நடத்திய நீதிபதி லதா, குற்றவாளிகள் ஏழு பேரையும் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஏப்ரல் 25ஆம் தேதி வெளியான ஆடியோ விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி, அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் ரவிச்சந்திரனையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர்களான பர்வீன், ஹசீனா, லீலா, அருள்சாமி, செல்வி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணையில் சேலம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் சாந்தி, பெங்களூருவைச் சேர்ந்த ரேகா, கார் ஓட்டுநர் நந்தகுமார், கொல்லிமலையைச் சேர்ந்த பாதிரியார் கந்தசாமி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு
இந்நிலையில் கைதானவர்களில் ஓய்வுப்பெற்ற செவிலியர் அமுதவல்லி உட்பட 4 பேர் ஜாமீன் பெற்ற நிலையில், மீதமுள்ள இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா,அருள்சாமி,செல்வி, சாந்தி, ரேகா, நந்தகுமார் ஆகியோரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததால், காவல்துறையினர் ஏழு பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதையடுத்து விசாரணை நடத்திய நீதிபதி லதா, குற்றவாளிகள் ஏழு பேரையும் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Intro:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான ஏழுபேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு


Body:இராசிபுரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவல்லி என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் கூட்டுறவு வங்கி பணியாளர் ரவிச்சந்திரன் என்பவரையும் இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்யப்பட்டார்.

பலகோணங்களில் விசாரணை மேற்கொண்ட இராசிபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் குழந்தைகள் விற்பனை செய்ததற்கு உறுதுணையாக இருந்த இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா, லீலா,அருள்சாமி,செல்வி ஆகியோரை கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் சேலம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் சாந்தி, பெங்களூரை சேர்ந்த ரேகா, அமுதாவின் கார் ஓட்டுநர் நந்தகுமார் மற்றும் கொல்லிமலையை சேர்ந்த பாதிரியார் கந்தசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் குழந்தைகளை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதானவர்களில் ஓய்வுப்பெற்ற செவிலியர் அமுதா உட்பட 4 பேர் ஜாமீன் பெற்ற நிலையில் மீதமுள்ள இடைத்தரகர்கள் பர்வீன்,ஹசீனா,அருள்சாமி,செல்வி, சாந்தி, ரேகா, நந்தகுமார் ஆகியோரின், நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் ஏழு பேரையும் நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டன.

இந்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட நீதிபதி லதா குற்றவாளிகள் ஏழு பேரையும் வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.

இதனையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறைக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டனர்.


Conclusion:
Last Updated : Aug 1, 2019, 3:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.