ETV Bharat / state

லாரி ஓட்டுநர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை!

author img

By

Published : Mar 7, 2021, 3:18 PM IST

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே திருமணமான 4 மாதத்தில், லாரி ஓட்டுநர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார்.

crime news
லாரி ஓட்டுநர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை

பரமத்திவேலூர் அருகே உள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் தனசீலன் (30). இவர் கோழிக்கால்நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த மைதிலி (25) என்ற பெண்ணை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். மனைவி மைதிலி மூன்று மாத கர்ப்பமாக உள்ளதால் அவர் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று (மார்ச்7) வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனசீலன் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி விட்டிற்கு வந்தவர், கதவை பூட்டிக்கொண்டு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் சம்பவ இடத்திலே தனசீலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பரமத்திவேலூர் காவல் துறையினர் தனசீலன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த தனசீலன் முன்னதாக கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் தனக்கு உடல் நிலை சரியில்லாததால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும், தன்னுடைய மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என எழுதி உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவித்தனர். இருப்பினும் காவல் துறையினர் விசாரணை முடிந்த பிறகே முழு விவரம் தெரியவரும் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடல் மீட்பு!

பரமத்திவேலூர் அருகே உள்ள சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் தனசீலன் (30). இவர் கோழிக்கால்நத்தம் ரோடு பகுதியை சேர்ந்த மைதிலி (25) என்ற பெண்ணை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். மனைவி மைதிலி மூன்று மாத கர்ப்பமாக உள்ளதால் அவர் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று (மார்ச்7) வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனசீலன் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி விட்டிற்கு வந்தவர், கதவை பூட்டிக்கொண்டு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் சம்பவ இடத்திலே தனசீலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவல் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பரமத்திவேலூர் காவல் துறையினர் தனசீலன் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த தனசீலன் முன்னதாக கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் தனக்கு உடல் நிலை சரியில்லாததால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும், தன்னுடைய மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என எழுதி உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவித்தனர். இருப்பினும் காவல் துறையினர் விசாரணை முடிந்த பிறகே முழு விவரம் தெரியவரும் எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடல் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.