ETV Bharat / state

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது! - நாமக்கல் மாவட்டம்

சேலம்: ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது!
author img

By

Published : May 11, 2019, 8:30 AM IST

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, ஓய்வு பெற்ற செவிலி அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், தரகர்கள் லீலா, ஹசீனா உட்பட எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணன், ராஜா சீனிவாசன் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது

இதில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் அருள்சாமி ஆகிய மூன்று பேரை நேற்று நாமக்கல் நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தியை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, ஓய்வு பெற்ற செவிலி அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், தரகர்கள் லீலா, ஹசீனா உட்பட எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணன், ராஜா சீனிவாசன் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது

இதில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் அருள்சாமி ஆகிய மூன்று பேரை நேற்று நாமக்கல் நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர் சாந்தியை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் - 10.04.2019


 ராசிபுரம்  குழந்தை விற்பனை விவகாரம்... மேலும் ஒரு பெண் உதவி செவிலியரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.



குழந்தை விற்பனைக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் அருள் சாமியிடம் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில்  இன்று விசாரணை நடைபெற்றது.

20க்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன.

தற்போது சிபிசிஐடி கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி  பச்சிளம்  குழந்தைகள் விற்பனை தொடர்பான சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் அமுதா,அருள்சாமி,முருகேசன் ஆகியோருடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர்  அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி செவிலியர் பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர் 

இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குழந்தை விற்பனை புரோக்கர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. துணை துணை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணன் மற்றும் சென்னையை சேர்ந்த ராஜா சீனிவாசன் தலைமையிலான இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இவர்கள் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் ப இடைத்தரகர்கள் அருள்சாமி ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று நாமக்கல் நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்தனர். பின்னர் இரவு 9 மணி அளவில் விசாரணை தொடங் கிய அதிகாரிகள் விடிய விடிய தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

 ஆனால் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன என தெரியவந்துள்ளது . தமிழகத்தில் பல்வேறு பகுதிகளும், வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் குழந்தை விற்பனை செய்தது தெரியவந்தது . இதில் இடைத்தரகர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன .

மேலும் கொல்லிமலை பகுதியில் 20 மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்ததாகவும்  கூறப்படுகிறது குழந்தைகளை சொற்ப விலைக்கு வாங்கி 2 முதல் 4  லட்சம் வரை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி  பச்சிளம்  குழந்தைகள் விற்பனை தொடர்பான அமுதா,அருள்சாமி,முருகேசன் ஆகியோருடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 வெள்ளியன்று மேலும் சேலம் சர்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் உதவி செவிலியர் சாந்தி என்பவரை கைது செய்து ராசிபுரம் கோர்ட்டில்  ஆஜர்படுத்தினர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.