ETV Bharat / state

கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்: கைவிட்ட காதலன் மீது பாய்ந்த போக்சோ! - நாமக்கல் கொல்லிமலை விவசாயி கைது

நாமக்கல்: கொல்லிமலை அருகே காதலித்து ஏமாற்றி இளம்பெண்ணை கைக்குழந்தையுடன் கைவிட்ட விவசாயி போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.

namakkal-near-kolli-hills-farmer-arrested-for-abandoning-woman-with-child
விவசாயி ஒருவர் போக்சோவில் கைது
author img

By

Published : Jan 21, 2020, 5:24 PM IST

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆரியூர்நாடு தெவ்வாய்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை ஆரியூர்நாடு குழிவளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி நந்தகுமார் (22) கடந்த ஓராண்டு காலமாக காதலித்துவந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அந்தப் பெண்ணை அவர் தன் ஆசைக்கு இணங்கவைத்து கர்ப்பமாக்கினார். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், திருமணம்செய்வதாகக் கூறிய நந்தகுமாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அவரை அழைத்து தனது மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டனர். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்ததால் பெண்ணின் தந்தை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு காவல்நிலையம்

அதன் அடிப்படையில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கொல்லிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த பக்கத்து வீட்டு இளைஞர் - போக்சோவில் கைது!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆரியூர்நாடு தெவ்வாய்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை ஆரியூர்நாடு குழிவளவு பகுதியைச் சேர்ந்த விவசாயி நந்தகுமார் (22) கடந்த ஓராண்டு காலமாக காதலித்துவந்துள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அந்தப் பெண்ணை அவர் தன் ஆசைக்கு இணங்கவைத்து கர்ப்பமாக்கினார். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், திருமணம்செய்வதாகக் கூறிய நந்தகுமாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அவரை அழைத்து தனது மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டனர். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்ததால் பெண்ணின் தந்தை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொல்லிமலையில் உள்ள வாழவந்திநாடு காவல்நிலையம்

அதன் அடிப்படையில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கொல்லிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த பக்கத்து வீட்டு இளைஞர் - போக்சோவில் கைது!

Intro:கொல்லிமலையை சேர்ந்த 17 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பிணி ஆக்கி ஆண்குழந்தை பிறந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆரியூர் நாடு குழிவளவை சேர்ந்த விவசாயி நந்தகுமார் போஸ்கோ சட்டத்தில் கைது, பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் வாழவந்திநாடு போலீசார் நடவடிக்கைBody:நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆரியூர்நாடு தெவ்வாய்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது பெண்ணை ஆரியூர்நாடு குழிவளவு பகுதியை சேர்ந்த விவசாயி நந்தகுமார் (22) கடந்த ஒரு வருட காலங்களாக காதலித்து திருமணம் செய்து கொள்ளவதாக கூறி 17வயது இளம்பெண்ணை ஆசைக்கு இணங்க வைத்து கர்ப்பமாக்கி கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. இந்நிலையில் திருமணம் செய்வதாக கூறிய நந்தகுமாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் அவரை அழைத்து திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டனர். இருப்பினும் நந்தகுமார் திருமணம் செய்து கொள்வதை மறுத்ததால் பெண்ணின் தந்தை வாழவந்திநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் கொல்லிமலை வாழவந்திநாடு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 17வயது இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பணியாக்கி ஆண்குழந்தை பிறந்த நிலையில் திருமணம் செய்ய மறுத்த நந்நதகுமாரை வாழவந்திநாடு போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கொல்லிமலை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.