ETV Bharat / state

நாமக்கல்லில் குழந்தை விற்ற விவகாரத்தில் செவிலி அமுதா கைது!

author img

By

Published : Apr 25, 2019, 6:30 PM IST

Updated : Apr 25, 2019, 7:26 PM IST

நாமக்கல்: ராசிபுரத்தில் குழந்தை விற்ற விவகாரத்தில் ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கலில் குழந்தை விற்ற விவகாரத்தில் செவிலி அமுதா கைது!

தற்போதைய நவீன உலகத்தில், பல்வேறு மருத்துவ வசதிகள் வந்தபோதிலும் குழந்தை வரம் கிடைக்காமல் பலர் தவித்துவருகின்றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், குழந்தைகளை மறைமுகமாக விற்பனை செய்துவரும் கொடூரம் அவ்வப்போது அரங்கேறிவருகிறது.

அதன்படி, ராசிபுரத்தில் ஓய்வுபெற்ற செவிலி அமுதா குழந்தைகளை மறைமுகமாக விற்பனை செய்துள்ளார். கடந்த 30 வருடங்களாகத் தங்கு தடையின்றி இந்த விற்பனை ஜோராக நடந்துவருகிறது. இதில் ஆண் குழந்தை வெள்ளையாக 3 கிலோ எடையுடன் இருந்தால் குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் வரையும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் வரை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் தரகர் செவிலி அமுதாவிடம் ஒரு தம்பதிகள் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தரகர் செவிலியர் அமுதா கைது செய்யப்பட்டார்.

இதில் கைதான குழந்தைத் தரகர் அமுதா, தான் இதுவரை மூன்று குழந்தைகளை விற்றுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து தற்போது நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

குழந்தை விற்பனை செய்யும் இந்தக் கும்பல் பல இடங்களில் முக்கியமாக வெளி மாநிலங்களிலிருந்தும் குழந்தைகளைத் திருடி வந்து விற்று வருவதாகவும், இந்தக் குழந்தை வியாபாரம் இதுவரை நாமக்கல்லில் கொடிகட்டிப் பறந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

நாமக்கலில் குழந்தை விற்ற விவகாரத்தில் செவிலி அமுதா கைது!

தற்போதைய நவீன உலகத்தில், பல்வேறு மருத்துவ வசதிகள் வந்தபோதிலும் குழந்தை வரம் கிடைக்காமல் பலர் தவித்துவருகின்றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், குழந்தைகளை மறைமுகமாக விற்பனை செய்துவரும் கொடூரம் அவ்வப்போது அரங்கேறிவருகிறது.

அதன்படி, ராசிபுரத்தில் ஓய்வுபெற்ற செவிலி அமுதா குழந்தைகளை மறைமுகமாக விற்பனை செய்துள்ளார். கடந்த 30 வருடங்களாகத் தங்கு தடையின்றி இந்த விற்பனை ஜோராக நடந்துவருகிறது. இதில் ஆண் குழந்தை வெள்ளையாக 3 கிலோ எடையுடன் இருந்தால் குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் வரையும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் வரை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் தரகர் செவிலி அமுதாவிடம் ஒரு தம்பதிகள் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தரகர் செவிலியர் அமுதா கைது செய்யப்பட்டார்.

இதில் கைதான குழந்தைத் தரகர் அமுதா, தான் இதுவரை மூன்று குழந்தைகளை விற்றுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து தற்போது நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார்.

குழந்தை விற்பனை செய்யும் இந்தக் கும்பல் பல இடங்களில் முக்கியமாக வெளி மாநிலங்களிலிருந்தும் குழந்தைகளைத் திருடி வந்து விற்று வருவதாகவும், இந்தக் குழந்தை வியாபாரம் இதுவரை நாமக்கல்லில் கொடிகட்டிப் பறந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

நாமக்கலில் குழந்தை விற்ற விவகாரத்தில் செவிலி அமுதா கைது!
தீ.பரத்குமார்
நாமக்கல்

ஏப்ரல் 25

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை அமோகம் 
எடைபோட்டு, நிறம் பார்த்து விற்கும் கொடூரம்
ராசிபுரம் பகுதியில் பிறப்பு சான்றிதழுடன் குழந்தை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 

பெரும்பாலான தம்பதிகளுக்கு குழந்தைகள் பிறப்பதில்லை. தற்போதைய நவீன உலகத்தில், பல்வேறு மருத்துவ வசதிகள் வந்தபோதிலும் குழந்தை வரம் கிடைக்காமல் பலர் தவித்துவருகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் சட்டப்படி தத்து எடுக்கவும், பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அரசு விதித்துள்ள அத்தனை கட்டுப்பாடுகளையும்  நிறைவேற்றி குழந்தையை தத்து எடுப்பது நடுத்தர மக்களால் முடியாத காரியமாக உள்ளது. இதனால், உள்ளூரில் சட்டத்திற்குபுறம்பாக குழந்தைகளை தத்து எடுத்துவருகின்றனர். ஏழை வீட்டில்பிறக்கும் குழந்தைகள், தவறான நடத்தையால் பிறக்கும் குழந்தைகளை இடைத்தரகர்கள் வாங்கி வந்து நல்ல விலைக்கு விற்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர்  தரகராக இருந்து குழந்தைகளை வாங்கி, விற்று வருகிறார். கடந்த 30 வருடங்களாக தங்கு தடையின்றி இந்த விற்பனை ஜோராக நடந்து வருகிறது. 

குழந்தை விலை விபரம்: ஆண் குழந்தை என்றால் வெள்ளையாக 3 கிலோ எடையில் இருந்தால் குறைந்தபட்சம் ரூ. 4 லட்சம் வரை விற்கப்படுகிறது. பெண் குழந்தை என்றால் 3 லட்சம் வரை விற்பனையாகிறது. குழந்தைகளின் கலர், எடை ஆகியவைதான் அதன் விலையை நிர்ணயிக்கின்றன. அதுமட்டுமின்றி ரூ. 70 ஆயிரம் கொடுத்தால், ராசிபுரம் நகராட்சியில் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழும் வாங்கி தரப்படுகிறது. இதற்காக பெரிய கும்பலே செயல்பட்டு வருகிறது. 
தரகர் பெண்ணிடம் ஒரு தம்பதிகள் பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கடந்த, 30 வருடங்களாக குழந்தைகளை வாங்கி கொடுப்பதாகவும், இதனால், செவிலியர் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அட்வான்ஸ் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் குழந்தையை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்றும், குழந்தை வந்ததும் நேரில் பார்த்து  எடுத்துக்கொள்ளலாம் எனவும் அந்த பெண் கூறுகிறார். அதுமட்டுமின்றி கருப்பாக இருந்ததால் ஆண் குழந்தையை குறைந்த விலைக்கு கடந்த முறை விற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். வெள்ளையாக, அமுல் பேபி போல் குழந்தை வேண்டும் என்றால் ரூ. 4.3 லட்சம் ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  அதேபோல், பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்றாலும், ராசிபுரம் நகராட்சியில் 70 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிகொடுப்பதாகவும்  உறுதியளித்துள்ளார். இந்த ஆடியோ ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை விற்பனை செய்யும் இந்த கும்பல் பல இடங்களில்  முக்கியமாக வெளி மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளை திருடி வந்து விற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்களில் நட்பு வைத்துள்ள இந்த கும்பல், அவர்கள் மூலம்  குழந்தைகள் இருப்பதையும், குழந்தை வேண்டிவரும் தம்பதியரையும் தெரிந்து கொண்டு குழந்தை வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். குழந்தை வேண்டி வரும் தம்பதிகள் யாரும் புகார் தெரிவிக்காததால் ராசிபுரத்தில் குழந்தை வியாபாரம் தங்கு தடையின்றி கொடிகட்டி பறக்கிறது. 
 காவல்துறையினர் விசாரித்தால் இந்த கும்பல் பற்றி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என பொதுமக்கள் கூறினர்.

மேலும் கைதான குழந்தை புரோக்கர் அமுதா தான் இதுவரை மூன்று குழந்தைகளை விற்றுள்ளதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து தற்போது நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரளரசு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். 


Script in mail
Visual in ftp

File name : TN_NMK_02_25_CHILD_BROKER_VIS_7205944 

Last Updated : Apr 25, 2019, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.