ETV Bharat / state

உழுதலில் மாற்றத்தை ஏற்படுத்திய விவசாயி!

நாமக்கல்: விவசாய நிலத்தினை உழுவதற்கு டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் ஏர்கலப்பையில்‌ மாற்றம் செய்து மாடுகளை வைத்து விவசாயி ஒருவர் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

author img

By

Published : Oct 16, 2019, 6:50 PM IST

modern technology used in agriculture

பருவ மழையை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய நிலங்களை உழுது தயார்படுத்துவது வழக்கம். உழுதல் உள்பட்ட பணிகளுக்கு காளை மாடுகளை பயன்படுத்தி முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்துவந்தனர். காலப்போக்கில் விவசாயத்தை நவீனம் ஆட்கொள்ள, ஏர்கலப்பையை வீசிவிட்டு டிராக்டர் மூலம் நிலத்தை உழுதனர். இதன்மூலம் காளை மாடுகளின் வளர்ப்பு குறைந்து, அவை வெறும் இறைச்சிக்காக வெட்டப்படும் நிலை ஏற்பட்டது.

நவீனம் வந்து நமது நேரத்தை மிச்சப்படுத்தினாலும், மனிதனுக்கும் விலங்குக்கும் இடையேயான தொடர்பு அத்துப்போகும் அபாய நிலையை அடைந்துவிட்டோம். அந்த நிலையை மாற்ற வித்திட்டுள்ளார் நாமக்கல் விவசாயி.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நன்செய்இடையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்நாதன். இவர் புதுவித தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை முறையில் இரு ஜோடி காங்கேயம் காளைகளை வைத்து தன்னுடைய நிலத்தினை உழுது வருவதாகக் கூறுகிறார்.

ரேக்ளா பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் வண்டியில் சிறிது மாற்றத்தினை மேற்கொண்டு, நவீன ரக டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் கலப்பையிலும் சிறிது மாற்றத்தினை ஏற்படுத்தி, இவை இரண்டையும் இணைத்து மாடுகள் இழுக்கும் வண்ணம் மிகக் குறைந்த எடையில் ஒரு இயந்திரத்தை உருவாக்கி, அதன்மூலம் நிலத்தை உழுது விவசாயம் செய்துவருகிறார். இதனால் நிலம் செம்மைப்படுவது மட்டுமின்றி, மனிதனுக்கும் விலங்குக்கும் இடையேயான உறவு புத்துயிர் பெரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பருவ மழையை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய நிலங்களை உழுது தயார்படுத்துவது வழக்கம். உழுதல் உள்பட்ட பணிகளுக்கு காளை மாடுகளை பயன்படுத்தி முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்துவந்தனர். காலப்போக்கில் விவசாயத்தை நவீனம் ஆட்கொள்ள, ஏர்கலப்பையை வீசிவிட்டு டிராக்டர் மூலம் நிலத்தை உழுதனர். இதன்மூலம் காளை மாடுகளின் வளர்ப்பு குறைந்து, அவை வெறும் இறைச்சிக்காக வெட்டப்படும் நிலை ஏற்பட்டது.

நவீனம் வந்து நமது நேரத்தை மிச்சப்படுத்தினாலும், மனிதனுக்கும் விலங்குக்கும் இடையேயான தொடர்பு அத்துப்போகும் அபாய நிலையை அடைந்துவிட்டோம். அந்த நிலையை மாற்ற வித்திட்டுள்ளார் நாமக்கல் விவசாயி.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நன்செய்இடையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில்நாதன். இவர் புதுவித தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை முறையில் இரு ஜோடி காங்கேயம் காளைகளை வைத்து தன்னுடைய நிலத்தினை உழுது வருவதாகக் கூறுகிறார்.

ரேக்ளா பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் வண்டியில் சிறிது மாற்றத்தினை மேற்கொண்டு, நவீன ரக டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் கலப்பையிலும் சிறிது மாற்றத்தினை ஏற்படுத்தி, இவை இரண்டையும் இணைத்து மாடுகள் இழுக்கும் வண்ணம் மிகக் குறைந்த எடையில் ஒரு இயந்திரத்தை உருவாக்கி, அதன்மூலம் நிலத்தை உழுது விவசாயம் செய்துவருகிறார். இதனால் நிலம் செம்மைப்படுவது மட்டுமின்றி, மனிதனுக்கும் விலங்குக்கும் இடையேயான உறவு புத்துயிர் பெரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Intro:பரமத்திவேலூர் அடுத்துள்ள நன்செய்இடையாறு பகுதியில் விவசாய நிலத்தினை உதவுவதற்கு டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் ஏர்கலப்பையில்‌ மாற்றம் செய்து மாடுகளை வைத்து உழுது வரும் விவசாயி


Body:
பருவம் பார்த்து மழையை பயன்படுத்தி விவசாயிகள் விவசாய நிலங்களை உழுது தயார்படுத்துவது வழக்கம். இவர்களுக்கு உறுதுணையாக நிலத்தை உழுதல் உட்பட பணிகளுக்கு காளை மாடுகளை பயன்படுத்தி முற்றிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து வந்தனர்.  காளை மாடுகளை ஏர்கலப்பையில் பூட்டி நிலத்தையும் உழுது சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.   நவீன மாற்றத்தினால் ஏர்கலப்பை எடுத்து விவசாயம் செய்து காலம் மாறி  'டிராக்டர்' மூலமாக நிலம் உழும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஒரு நாளிலேயே உழுது தயார்படுத்தி வந்ததால் விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்திற்கு 'குட்பை' சொல்லி விட்டு நாகரிக விவசாயத்திற்கு மாறி விட்டனர். இதனால் விவசாய பணிகளை மேற்கொண்டு வந்த கூலி ஆட்கள் மெல்ல மெல்ல குறையத் தொடங்கி காலப்போக்கில் விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை பிரச்னை  தலைதூக்கி தற்போது விஸ்வரூபமாக மாறியுள்ளது. இதனால் ஆட்கள் பற்றாக்குறையின் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் தங்களது  நிலங்களுக்கு டிராக்டரை வைத்து உழுது விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். 


இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நன்செய்இடையாறு பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில்நாதன் என்பவர் புதுவித தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இயற்கை முறையில் இரு ஜோடி காங்கேயம் காளைகளை வைத்து தன்னுடைய நிலத்தினை உழுது வருகிறார். ரேக்ளா பந்தயங்களுக்கு பயன்படுத்தப்படும் வண்டியில் சிறிது மாற்றத்தினை மேற்கொண்டு நவீன ரக டிராக்டர்களில் பயன்படுத்தப்படும் கலப்பையிலும் சிறிது மாற்றத்தினை ஏற்படுத்தி மாடுகள் இழுக்கும் வண்ணம் மிக குறைந்த எடை கொண்ட ஒரு அமைப்பினை உருவாக்கி விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.


இதுகுறித்து  விவசாயி செந்தில்நாதன் கூறுகையில் " தங்கள் பூர்வீகமாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும் தங்களுக்கு நவீன விவசாய முறைகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியாத காரணத்தால் பல ஆண்டுகளாக டிராக்டரை கொண்டு நிலத்தினை உழுவது ரசாயன உரங்களை பயிர்களுக்கு தெளித்தும் விவசாயம் செய்து வந்ததாகவும் தற்போது அதன் பாதிப்புகள் பற்றி அறிந்ததால் அதனை முற்றிலும் தவிர்த்துவிட்டதாகவும் தற்போது பண்டைய காலங்களில் மேற்கொண்டு வந்த பாரம்பரிய விவசாய முறையில் விவசாயம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். தற்போது ஏர் கலப்பையில் மாற்றம் செய்த முறையின் மூலம் நிலத்தினை உழுவது மூலம் மாடுகளின் சாணத்தாலும் கோமியத்தினாலும் நிலத்திற்கு இயற்கையாகவே யூரியா சத்து கிடைத்து விடுவதாகவும் இதனால் ரசாயன யூரியாக்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் டிராக்டர் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தினை அரை மணி நேரத்தில் உழுவலாம் எனவும் இந்த வகை மாடுகள் மூலம் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படுவதாகவும் ஆனால் இயற்கையுடன் இயைந்து ஏர் பூட்டுவதால் மனதிற்கு ஒருவித நிம்மதியை தருவதாக தெரிவிக்கிறார் விவசாயி செந்தில்நாதன்.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.