ETV Bharat / state

'எங்ககிட்ட சரக்கு இருக்கு' - வாசலில் ஆள் நிறுத்தி மது விற்பனையில் ஈடுபட்ட உணவகத்தினர்! - liquor bottle sold at near government tasmac bar

நாமக்கல்: குடியரசு தினத்தில் உணவகத்தில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது.

ரகசிய மது விற்பனை
ரகசிய மது விற்பனை
author img

By

Published : Jan 26, 2020, 3:20 PM IST

இன்று 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு விடுமுறை தினமான இன்று அரசு மதுபானக் கடைகளுக்கும், மதுபான விற்பனைக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஆனால், நாமக்கல் நகரின் மையப்பகுதியான நகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையை அடுத்து, தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலையிலிருந்து சட்ட விரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை அறிந்த மதுப்பிரியர்கள் உணவகத்திற்கு படையெடுத்தது மட்டுமின்றி உணவகத்திலேயே அமர்ந்து மது அருந்துவது, மது பாட்டில்களை வாங்கிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

ரகசிய மது விற்பனை

இந்தச் சட்டவிரோத செயலுக்கு அலுவலர்களும் துணை போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

இன்று 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு விடுமுறை தினமான இன்று அரசு மதுபானக் கடைகளுக்கும், மதுபான விற்பனைக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஆனால், நாமக்கல் நகரின் மையப்பகுதியான நகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள அரசு மதுபானக் கடையை அடுத்து, தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலையிலிருந்து சட்ட விரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதை அறிந்த மதுப்பிரியர்கள் உணவகத்திற்கு படையெடுத்தது மட்டுமின்றி உணவகத்திலேயே அமர்ந்து மது அருந்துவது, மது பாட்டில்களை வாங்கிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

ரகசிய மது விற்பனை

இந்தச் சட்டவிரோத செயலுக்கு அலுவலர்களும் துணை போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு!

Intro:நாமக்கல் நகர மையப்பகுதியில் குடியரசு தினத்தில் உணவகத்தில் சட்டவிரோத மது விற்பனை அமோகம்
Body:நாட்டின் 71 வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு விடுமுறை தினமான இன்று அரசு மதுபான கடைகளுக்கும், மதுபான விற்பனைக்கும் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் நகரின் மையப்பகுதியான நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு மதுபான கடைக்கு அருகில் செயல்படும் நியூ லவ்லி ரெஸ்டாரன்ட் என்ற தனியார் உணவு விடுதியில் இன்று காலை முதல் சட்ட விரோதமாக மது விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருகிறது. மேலும் மது பிரியர்கள் உணவு விடுதியில் அமர்ந்து மது அருந்துவும், மதுக்களை வாங்கி செல்வதும் நடைபெற்று வருகிறது. இந்த சட்டவிரோத செயலுக்கு அதிகாரிகளும் துணை போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.