ETV Bharat / state

வழக்கறிஞர் தாக்குதல்: நாமக்கல்லில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் - நாமக்கல் நீதிமன்றம்

நாமக்கல்: வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVOCATE
author img

By

Published : Jun 7, 2019, 8:30 AM IST

நல்வினை விஸ்வராஜ் என்ற வழக்கறிஞர், மே 31ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில், இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இதனிடையே, இராசிபுரம் காவல்நிலையத்தின் அருகே தட்டச்சு அலுவலகம் வைத்துள்ள கோபால் என்பவர், வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜின் அலுவலகத்திற்கு வந்து, போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் என்பவர் உட்பட ஆறுபேர் பேர் தன்னை தாக்குவதாக வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.

அப்போது, வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு வந்த அந்த கும்பல் கோபாலை தாக்கியுள்ளனர். அதனைத் தட்டிக்கேட்கச் சென்ற வழக்கறிஞரையும் அந்த கும்பல் இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கியுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், இராசிபுரம் காவல் துறையினர் போக்குவரத்து காவலர் சதீஷ்குமாரின் கூட்டாளிகளை கைது செய்தனர். சதீஷ்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார்.

தற்போது, தலைமறைவாக உள்ள போக்குவரத்து காவலர் சதீஷ்குமாரை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல்லில், நேற்று (ஜூன் ஆறு) ஒருநாள் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நாமக்கல் நீதிமன்றம் வெறிச்சோடி காணப்பட்டது.

நல்வினை விஸ்வராஜ் என்ற வழக்கறிஞர், மே 31ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில், இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இதனிடையே, இராசிபுரம் காவல்நிலையத்தின் அருகே தட்டச்சு அலுவலகம் வைத்துள்ள கோபால் என்பவர், வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜின் அலுவலகத்திற்கு வந்து, போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் என்பவர் உட்பட ஆறுபேர் பேர் தன்னை தாக்குவதாக வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.

அப்போது, வழக்கறிஞரின் அலுவலகத்திற்கு வந்த அந்த கும்பல் கோபாலை தாக்கியுள்ளனர். அதனைத் தட்டிக்கேட்கச் சென்ற வழக்கறிஞரையும் அந்த கும்பல் இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கியுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் அளித்த புகாரின் பேரில், இராசிபுரம் காவல் துறையினர் போக்குவரத்து காவலர் சதீஷ்குமாரின் கூட்டாளிகளை கைது செய்தனர். சதீஷ்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார்.

தற்போது, தலைமறைவாக உள்ள போக்குவரத்து காவலர் சதீஷ்குமாரை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல்லில், நேற்று (ஜூன் ஆறு) ஒருநாள் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், நாமக்கல் நீதிமன்றம் வெறிச்சோடி காணப்பட்டது.

Intro:நாமக்கல்லில் வழக்கறிஞரை தாக்கப்பட்டதைக்கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு


Body:நாமக்கல் அருகே வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றம் புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர்.

நாமக்கல் அருகே இராசிபுரத்தில் கடந்த மே 31 அன்று இரவு ஒன்பது மணியளவில் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் என்பவர் இராசிபுரம் பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள தன்னுடைய அலுவலகத்தில் இருந்துள்ளார். இராசிபுரம் காவல்நிலையத்தின் அருகே தட்டச்சு அலுவலகம் வைத்துள்ள கோபால் என்பவர் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜின் அலுவலகத்தில் தன்னை போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் உட்பட ஆறுபேர் தாக்கியதாக கூறியுள்ளார். அந்த சமயம் அங்கு வந்த போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் தலைமையிலான கும்பல் மீண்டும் கோபாலை தாக்கியுள்ளனர். இந்நிலையில் வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ் அவர்களை தடுக்கமுயலும் போது வழக்கறிஞரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் அளித்த புகாரின் பெயரில் இராசிபுரம் போலீசார் போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் கூட்டாளிகளை கைது செய்தனர். இருப்பினும் போக்குவரத்து காவலர் சதீஷ்குமார் தலைமறைவாக உள்ளார். இதன்காரணமாக தலைமறைவாக உள்ள போக்குவரத்து காவலர் சதீஷ்குமாரை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல்லில் இன்று ஒருநாள் மட்டும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர். வழக்கறிஞர்கள் நீதிமன்றபுறக்கணிப்பில் ஈடுப்பட்டதால் இன்று நாமக்கல் நீதிமன்றம் வெறிச்சோடி காணப்பட்டது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.