ETV Bharat / state

இனி வரும் காலங்களில் திமுகவுடன் மட்டுமே கூட்டணி! - கொங்கு ஈஸ்வரன்

நாமக்கல் : இனிவரும் காலங்களில் கொங்குநாடு மக்கள் கட்சி திமுக-வுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன்
author img

By

Published : Mar 19, 2019, 10:37 PM IST

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல்.18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி, திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, அக்கட்சியின் வேட்பாளராக ஏ.கே.பி.சின்ராசு அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நாமக்கல் திமுக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராசு-வை தொண்டர்களுக்கு அறிமுகம் செய்தனர்.

பின்னர் கூட்டத்தில் பேசிய ஈஸ்வரன், 'இனிவரும் காலங்களில் திமுக-வுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். சின்ராசுவை தங்கள் கட்சி வேட்பாளராகக் கருதாமல் திமுக வேட்பாளராகவே கருத வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகங்களில், கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது எனக் கூறி வருகின்றனர். இதனை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியின் கோட்டையாக மாறும்' எனப் பேசினார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல்.18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி, திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து, அக்கட்சியின் வேட்பாளராக ஏ.கே.பி.சின்ராசு அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், நாமக்கல் திமுக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராசு-வை தொண்டர்களுக்கு அறிமுகம் செய்தனர்.

பின்னர் கூட்டத்தில் பேசிய ஈஸ்வரன், 'இனிவரும் காலங்களில் திமுக-வுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். சின்ராசுவை தங்கள் கட்சி வேட்பாளராகக் கருதாமல் திமுக வேட்பாளராகவே கருத வேண்டும். பத்திரிகை மற்றும் ஊடகங்களில், கொங்கு மண்டலம் அதிமுக-வின் கோட்டையாக உள்ளது எனக் கூறி வருகின்றனர். இதனை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் திமுக கூட்டணியின் கோட்டையாக மாறும்' எனப் பேசினார்.

Intro:இனி வரும் காலங்களில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திமுகவுடன் மட்டுமே கூட்டணி வைக்கும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவிப்பு!


Body:தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.இந்நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களை போட்டி போட்டுக்கொண்டு அறிவித்தனர். மேலும் வாக்காளர்களை கவரும் விதமாக கவர்ச்சியான தேர்தல் அறிக்கைகளை இன்று அறிவித்தனர்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில் ஏ.கே.பி சின்ராசு என்பவரை வேட்பாளராக அறிவித்து இருந்தது.

இந்நிலையில் இன்று திமுக மாவட்ட அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி வேட்பாளர் ஏ கே பி சின்ராசு மற்றும் கட்சியின் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களை முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் அவர்கள் வரவேற்று திமுக தொண்டர்களிடையே வேட்பாளரை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் இனிவரும் காலங்களில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி எப்போதுமே திமுகவுடனே கூட்டணி அமைக்கும்.தங்கள் கட்சி வேட்பாளர் என கருதாமல் திமுக கட்சியின் வேட்பாளர் எனவே கருதவேண்டும். மேலும் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது என கூறிவருகின்றனர். இந்த நிலையை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நமது வேட்பாளரை வெற்றி பெறச் செய்து இந்த நிலையை மாற்ற வேண்டும் எனக் கூறினார்.


Conclusion:இதில் திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.